உடைந்து போன உறவை எப்படி மீண்டும் மீட்டெடுப்பது? சில எளிய டிப்ஸ் இதோ..
சிக்கல்கள் நிறைந்த உறவை சரிசெய்வதற்கான வழிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேலோட்டமாக பார்க்கும் போது ஒரு திருமண உறவு எவ்வளவு வலிமையானதாக தோன்றினாலும், அதை நிலையாக வைத்திருக்க பரஸ்பர புரிதல், அன்பு மரியாதை அவசியம். எனவே சில நேரங்களில் திடீரென உங்கள் உறவில் மோதல்களும் சண்டைகளும் அதிகரிக்கும். இதை கவனிக்கவில்லை எனில் அது பிரிவுக்கே வழிவக்கும். எனவே சிக்கல்கள் நிறைந்த உறவை சரிசெய்வதற்கான வழிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தனிப்பட்ட சிகிச்சைமுறை: திருமண உறவில் பிரச்சனை என்றால் அதில் தம்பதிகள் இருவருமே பாதிக்கப்பட்டிருப்பார்கள். கோபம், வருத்தம் அல்லது மனக்கசப்பைக் கொண்டிருக்கலாம், எனவே முதலில் நீங்கள் புரிந்துகொண்டு கடந்து செல்ல முயற்சிக்கவும். இது பற்றி உங்கள் துணையிடம் வெளிப்படையாக பேசவும்.
நீங்கள் கடந்த காலத்தில் செய்த தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது முக்கியம். இதற்கு உங்கள் துணை உடன் பல கடினமான உரையாடல்கள் தேவைப்படலாம். இது உங்கள் நேர்மையை அதிகரிப்பதுடன் உங்கள் துணையும் நீங்களும் புரிந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பை வழங்கும்.
உடைந்த நம்பிக்கையை மெதுவாக மீண்டும் கட்டியெழுப்புதல்: ஒரு உறவில் நம்பிக்கை சிதைந்துவிட்டால் அதற்கு விரைவான தீர்வை எட்ட முடியாது. எனவே நம்பகத்தன்மை, பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் நிலையான சான்றுகள் மூலம் குற்றம் செய்த துணை மற்றவரிடம் தாழ்மையுடன் நம்பகத்தன்மையை திரும்பப் பெற வேண்டும்.
தேவையான நடைமுறை மாற்றங்களைப் பற்றி விவாதிக்கவும்: உறவை அடுத்தக்கட்டத்திற்கு எப்படி நகர்த்துவது அல்லது அதற்கு தேவையான முன்முயற்சிகளை எப்படி எடுப்பது என்பது பற்றி உங்கள் துணையிடம் வெளிப்படையாக பேசுங்கள். உறவை வலுப்படுத்த சிறந்த தகவல் தொடர்பு உத்திகள் தேவை என்பதை மறக்க வேண்டாம்.
உங்கள் துணை சொல்வதை கவனமாக கேட்பது, வீட்டு வேலைகளை இருவரும் சமமாக பிரித்து செல்வது, பணம் தொடர்பான விஷயங்களில் வெளிப்படைத்தன்மை போன்ற செயல்கள் உறவை மீண்டும் கட்டியெழுப்ப உதவும்.
ஒன்றாக நேரம் செலவிடுவது. விழாக்களுக்கு ஒன்றாக செல்வது, நீங்கள் ஏற்கனவே சென்ற மகிழ்ச்சியான இடங்களுக்கு மீண்டும் செல்வது அல்லது ஒன்றாக படம் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
இவை மட்டுமின்றி தொழில்முறை நிபுணரின் உதவியை நாடலாம். உறவில் உள்ள சிக்கல்களை மூன்றாம் நபரிடம் சொல்வதன் மூலம் அவர் நடுநிலையாக யோசித்து சிறந்த தீர்வுகளை வழங்க முடியும்..