அஸ்தமனமாக போகும்.. உதயத்தூர் கிராமம் உருவாக்கிய உதயம் தியேட்டர்! நெகிழ்ச்சி பின்னணி குறித்த தகவல்!
உதயம் திரையரங்கம் இனி இயங்காது... மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்ட நிலையில்... இதன் முழு பின்னணி குறித்த பதிவு ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
udhayam theatre
சென்னை அசோக் பில்லர் என்றதுமே... பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது உதயம் திரையரங்கு தான். உள்ளே நுழைந்ததுமே பறந்து விரிந்த பார்க்கிங், அதை கடந்து சென்றால், டிக்கெட் கவுண்டர்... பின்னர் எந்த பக்கம் செல்வது என படம் பார்பவர்களையே யோசிக்க வைக்கும் அளவுக்கு 4 ஸ்கிரீன்களுடன், ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் வீதம்... படம் போடட்டது. குறிப்பாக விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானால் சொல்லவே வேண்டாம். ரசிகர்கள் உதயம் திரையரங்கம் முன்பு பெரிய பெரிய கட் அவுட் வைத்து... கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.
udhayam theatre
சென்னையை சுற்றிலும், நவீன மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், மால்கள் போன்றவை ஏராளமாக வந்து விட்டாலும், உதயம் திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பதற்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வசதியானவர் முதல் அடித்தட்டு ஏழை மக்கள் வரை எவ்வித பாகுபாடு இன்றி, இந்த திரையரங்கில் அனுமதிப்பது உண்டு. கடந்த 40 வருடமாக சென்னையின் அடையாளமாகவே மாறி போன, இந்த உதயம் திரையரங்கம் திடீர் என இனி இயங்காது என்கிற வார்த்தையை கூட, சென்னையில் உள்ள பல மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு இந்த உதயம் இவர்களின் இதயத்தில் நிலையான ஒன்றாக மாறி விட்டது என்று கூறினால் அது மிகையல்ல.
Suhani Bhatnagar Death: 'தங்கல்' படத்தில் அமீர் கானின் ரீல் மகளாக நடித்த 19 வயது நடிகை சுஹானி பட்னாகர் மரணம்!
udhayam theatre
இது ஒருபுறம் இருக்க... உதயம் திரையரங்கின் பின்னணி குறித்த முகநூல் பதிவு ஒன்று... தற்போது வைரலாக வருகிறது. இந்த பதிவில், பதிவிட்டுள்ளதாவது... "நெல்லை அண்ணாச்சிகள் தொடங்கிய பல கடைகள்தான் சென்னை முழுக்க உயர்ந்து நிற்கின்றன. பெரும்பாலும் நெல்லையில் இருந்து சென்னை வந்து பலர் பாத்திரம், துணி கடைகளை தொடங்கிய போது ஒரு குடும்பம் மட்டும் தியேட்டர் தொடங்க நினைத்தது. உதயத்தூரில் இருந்து வந்த அந்த குடும்பம் 1983ல் அசோக் பில்லர் சந்திப்பு அருகே.. நிலம் வாங்கி தியேட்டர் கட்டியது. முதலில் ஒரு ஸ்கிரீன் வைத்து கட்டப்பட்ட தியேட்டருக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்த போது.. தங்களின் உதயத்தூர் நினைவாக.. உதயம் தியேட்டர் என்று பெயர் வைக்கப்பட்டது. பரமசிவம் பிள்ளை மற்றும் அவரின் 5 சகோதரர்கள் என்று 6 பேர் சேர்ந்து உருவாக்கிய தியேட்டர் தான் இது.
அசோக் பில்லர் அருகே அமைந்துள்ள இந்த திரையரங்கம், 1983 இல் கட்டப்பட்டது. அதன்பின் வளர வளர தியேட்டரில் கூடுதல் ஸ்கிரீன் போடப்பட்டு உதயம், சந்திரன், சூரியன், உதயம் மினி என்று மாற்றப்பட்டது. சென்னையில் 20 வருடங்களுக்கு முன்பு வரை கூட சத்யம் , அபிராமிக்கு அடுத்தபடியாக பெரிய தியேட்டர் இதுதான். இது சென்னையின் மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமாக இயங்கும் சினிமா தியேட்டர்களில் ஒன்றாக இருந்தது. அதன்பின் இந்த தியேட்டரின் ஷேர் 6 அண்ணன் - தம்பிகளின் குடும்பத்தில் பிறந்த எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து அளிக்கப்பட்டது. அதன்பின் அது வேறு சில நிறுவனங்களுக்கும் கூட சென்றது. ஒழுங்கான ஒரு தலைமை இல்லாத காரணத்தால் 2000 தொடக்கத்தில் இந்த தியேட்டர் பெரிய பராமரிப்பு இன்றி பின்தங்கியது.
udhayam theatre
அதன்பின் கடந்த 2009ல்தான் சென்னையில் உள்ள உதயம் திரையரங்கை அதன் நிறுவன உறுப்பினர் பரமசிவம் பிள்ளை மீண்டும் வாங்கினார். அந்த தியேட்டரை உருவாக்கிய 6 சகோதரர்களில் அப்போது உயிரோடு இருந்த ஒரே ஆள் இவர்தான். சொத்துக்களை குடும்பத்திற்குள் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக ரூ.80 கோடிக்கு வாங்கினார். அதன்பின் இந்த தியேட்டரை 2013ல் விற்கும் முடிவை எடுத்தனர். ஆனால் அப்போது தியேட்டர் விற்பனைக்கு வரவில்லை. மாறாக வாங்க பெரிதாக ஆள் இன்றி அப்படியே இருந்தது. அதேபோல் இங்கே மக்கள் கூட்டமும் முன்பு அளவிற்கு இல்லை.
Udhayam Theatre
உதயம் தியேட்டரில் என் இதயத்தை தொலைச்சேன்.. என்று பாடல் தொடங்கி சென்னையின் லேண்ட்மார்க் பகுதிகளில் ஒன்றாக இந்த தியேட்டர் இருந்தது. இந்த நிலையில்தான் அந்த தியேட்டர் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த தியேட்டர் இருக்கும் பகுதியை காசாகிராண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது. உதயம் திரையரங்கம் இருந்த இடத்தில் விரைவில் மால் போன்ற ஒரு இடத்தை கட்ட உள்ளதாக கூறப்படுகிறது.
Nivisha Hospitalized: சன் டிவி சீரியல் ஹீரோயினுக்கு என்ன ஆச்சு? திடீர் என மருத்துவமனையில் அனுமதி!