Aishwarya-Dhanus: விவகாரத்திற்கு பிறகு தனுஷ்-ஐஸ்வர்யா திடீர் சந்திப்பு...என்ன காரணம்? வைரலாகும் செய்தி..
Aishwarya Dhanus Meet: விவகாரத்திற்கு பிறகு, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவும் ஒருவரை ஒருவர் ரகசியமாக சந்தித்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
Aishwary- dhanush
ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
Aishwary- dhanush
இதையடுத்து, இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. பின்னர் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில், குடும்பத்தினரும், நண்பர்களும் இறங்கினர்.
Aishwary- dhanush
விவாகரத்து அறிவிக்குப்பின் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே சினிமாவில் படு பிஸியானார்கள். இருவரும் அவ்வப்போது, தங்களுடைய இரு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் நேரத்தை செலவழித்து வருகிறார்கள்.
Aishwary- dhanush
இடையில் விவாகரத்துக்கு பின் ஒரு பார்ட்டியில் சந்தித்துக்கொண்ட இருவரும் எந்த ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியானது. இருவரும் விவாகரத்து செய்து கொள்ளவில்லை பிரிந்து இருக்கிறார்கள். விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்று தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா கூறியிருந்தார். இருப்பினும், இருவரும் ஒருவர் மீது ஒருவர் வெறுப்பாக இருந்ததால் இனி இருவரும் சேர வாய்ப்பில்லை என்று கூறப்பட்டு வந்தது.
Aishwary- dhanush
இதையடுத்து, தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவும் ஒருவரை ஒருவர் ரகசியமாக சந்தித்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, விவாகரத்துக்கு முன் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும், ஆரியபுரத்தில் உள்ள ஃபிளாட் ஒன்றில் வசித்து வந்துள்ளார்கள். இந்த நிலையில், இருவரும், அந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து போகிறார்களாம். மேலும், அந்த வீட்டின் வாசலில் இருக்கும் இருவரின் பெயர் கூட இன்னும் நீக்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. விவாகரத்துப்பின் இருவரும் ஒரே வீட்டிற்கு சென்று வருவது குறித்து பல்வேறு கேள்விகள் இணையத்தில் எழுந்துள்ளது.