Selvaraghavan: தனுஷே அடிவாங்குவான்..! செல்வராகவனை பார்த்தாலே பயந்து நடுங்குவாங்க... பிரபலம் கூறிய தகவல்!
ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் செல்வராகவன், துணை இயக்குநர்களிடமும், நடிகர்களிடமும் எப்படி நடந்து கொள்வார் என்பது குறித்து, காமெடி நடிகர் பவா லட்சுமணன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Selvaraghavan
இயக்குனரும், தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜாவின் மூத்த மகனான செல்வராகவன், துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இந்த படத்தின் மூலம் தான் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனான, தனுஷும் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தின் எதிர்பாராத வெற்றி இயக்குனர் செல்வராகவனை திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்கவைத்தது.
இந்த படத்தை தொடர்ந்து, செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள்... இந்த கால ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றாப்போல் வெளியாகி, செல்வராகவனுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளத்தையே பெற்று தந்தது என்றால் அது மறுக்க முடியாத உண்மை.
அதே போல் இவரின் கனவு படமாக உருவாகிய இரண்டாம் உலகம் திரைப்படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், இதை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான NGK, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை. எனவே படங்கள் இயக்குவதற்கு தற்காலிகமாக ரெஸ்ட் விட்டுவிட்டு நடிகராக களமிறங்கி கலக்கி வருகிறார்.
அந்த வகையில், தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த செல்வராகவன், இதை தொடர்ந்து... சாணி காகிதம், நானே வருவேன், பகாசுரன், பார்ஹான, மார்க் ஆண்டனி, மற்றும் தனுஷின் ராயன் படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் குறித்து, பிரபல காமெடி நடிகர் பவா லட்சுமணன் கொடுத்த பேட்டி ஒன்றில், செல்வராகவன் பற்றி பேசியுள்ளார். "செல்வராகவன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருகிறார் என்றாலே எல்லோரும் பயந்து நடுங்குவார்கள். போய் ஒளிந்து கொள்வார்கள். கார்ட்டூன் ஆர்டிஸ்டின் மகள் தான் அவர் முன்பு தைரியமாக பேசுவார் என தெரிவித்துள்ளார்.