Power Shutdown in Chennai: என்னடா இது வம்பா போச்சு! இன்னைக்குன்னு பார்த்து இவ்வளவு இடங்களில் மின்தடையா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்டி, தாம்பரம், போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கிண்டி:
தில்லை கங்கா நகர், வாணுவம்பேட்டை சாந்தி நகர், நிலமங்கை நகர், வள்ளலார் தெரு, கம்பர் தெரு, திலகர் தெரு, தொழில்வரி காலனி 1 முதல் 4வது தெரு, லட்சுமி நகர், ஆண்டாள் நகர் 3 முதல் 5வது குறுக்கு தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தாம்பரம்:
கடப்பெரி மெப்ஸ், செம்பாக்கம், சிட்லப்பாக்கம், அற்புதம் நகர், பர்மா காலனி, திருநீர்மலை, கஸ்தூரிபாய் நகர், அமர் நகர், சிட்லபாக்கம், வி.வி.கோவில் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
போரூர்:
மங்காடு நண்பர்கள் நகர், ராஜேஸ்வரி நகர், மலையம்பாக்கம், ரஹ்மத் நகர், சக்தி நகர், ருக்மணி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பெரம்பூர்:
கீழ்பாக்கம் வாட்டர் ஒர்க்ஸ், அயனாவரம், தாகூர் நகர், அண்ணா நகர் ‘ஓ’ மற்றும் ‘எல்’ பிளாக், ஐ.சி.எப் பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.