30 நாட்கள் தான் டைம்! அதுக்குள்ள மெடிக்கல் ஷாப்களில் சிசிடிவி கட்டாயம்! சென்னை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Medical Shop
சென்னையில் வலி நிவாரணிகள் என்ற பெயரில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட மாத்திரைகள் மருந்தகங்களில் (மெடிக்கல்) சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க சென்னை மாவட்ட நிர்வாகம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
Chennai District Collector
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனபொருட்கள் சட்டம் 1940 மற்றும் 1945 அட்டவணை "X "H","H1" Drugs குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்து கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் -1973 பிரிவு 133ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுப்படி, 05-03-2024 முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
இதையும் படிங்க: 30 நாட்கள் தான் டைம்! அதுக்குள்ள மெடிக்கல் ஷாப்களில் சிசிடிவி கட்டாயம்! சென்னை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
Chennai Medical Shop
அப்படி தவறும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின் போது சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது மேற்கண்ட உத்தரவினை பின்பற்றாததிற்காக உரிய சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.