சிவகார்திகேயன் பட இயக்குனருடன் கை கோர்க்கும் கேப்டன் விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன்! லேட்டஸ்ட் தகவல்!
கேப்டன் விஜயகாந்தின் மகன், சண்முக பாண்டியன் தன்னுடைய அடுத்த படத்தை சிவகார்த்திகேயன் பட இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன்னுடைய தந்தை கேப்டன் விஜயகாந்தின் மறைவில் இருந்து, மெல்ல மெல்ல மீண்டு வரும் அவருடைய மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் இருவருமே,மீண்டும் தங்களுடைய பணிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். விஜய பிரபாகரன் அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டிவரும் நிலையில், விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முக பாண்டியன் திரைப்படங்களில் பிஸியாகியுள்ளார்.
அந்த வகையில் தற்போது காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படமான 'படை தலைவன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை இயக்குனர் யு அன்பு என்பவர் எழுதி - இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே வால்டர் மற்றும் ரேக்ளா போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை திரையில் காட்டப்படாத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் முழுக்க முழுக்க எடுக்கப்பட்டு வரும் இந்த படத்திற்காக, தன்னுடைய தோற்றத்தை மாற்றி பல்வேறு காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் சண்முக பாண்டியன். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, ஒரிசா, தாய்லாந்து போன்ற காட்டுப்பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து சண்முக பாண்டியன் நடிக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது சிவகார்த்திகேயனை வைத்து சீமராஜா, விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி போன்ற படங்களை இயக்கிய, இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்க உள்ளதாகவும், விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.