திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் காவல்துறை என்று ஒன்று செயல்படுகிறதா? இல்லையா? அண்ணாமலை கேள்வி!
சிவகங்கையில் நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக்கொண்டிருந்த இரண்டு சிறார்கள் உள்ளிட்ட 5 பேரை கொடூரமாக வெட்டி நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார்.
sivagangai
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கல்லுவழி கிராமத்தில் வசித்து வருபவர்கள் சின்னப்பன். இவரது மனைவி உபகாரமேரி. இவர்களது மகன் ஜேக்கப் பாரி வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இதனால் ஜேக்கப்பின் மனைவி அரசி, தனது 12 வயது மகள் ஜெர்லின் மற்றும் 8 வயது மகன் ஜோபின் ஆகியோருடன் மாமனார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் சின்னப்பனின் வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது தூங்கி கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் 5 பேரும் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்தனர். எப்படியோ மயக்கம் தெளிந்த சிறுவன் சம்பவம் தொடர்பாக உறவினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
Police investigation
உடனே பதறியடித்துக்கொண்டு வீட்டிற்கு ஓடிவந்த உறவினர்கள் மூச்சு பேச்சு இல்லாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்த 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின், இந்த மாடல் அரசுக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க;- ஊடக சுதந்திரத்துக்கு எதிராக செயல்படும் திமுக அரசு.. இது போன்ற அராஜகங்கள் நீண்ட நாட்கள் நீடிக்காது.. அண்ணாமலை.!
annamalai
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகில் உள்ள கல்லுவழி என்ற கிராமத்தில், நள்ளிரவில் வீடு புகுந்து, தூங்கிக்கொண்டிருந்த இரண்டு சிறார்கள் உள்ளிட்ட 5 பேரை கொடூரமாக வெட்டி, நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
mk stalin
திமுக ஆட்சியில், பொதுமக்கள் உயிர்ப் பாதுகாப்பு என்பது மிகப்பெரும் கேள்விக்குரியதாகியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு இதை விடக் கீழ்நிலைக்குச் செல்ல முடியாது என்றிருக்கையில், தினந்தோறும் நடைபெறும் குற்றச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்கை இன்னும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்கின்றன.
இதையும் படிங்க;- தன்னை நம்பும் சமூகத்தை திமுகவிடம் அடகு வைத்துவிட்டார் திருமாவளவன்.. அண்ணாமலை விளாசல்.!
DMK Government
சட்டம் ஒழுங்கு எனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், யாருக்கோ கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். திமுக அரசின் கையாலாகாத்தனத்தால், காவல்துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்ற கேள்வி, பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒரு அரசின் அடிப்படைக் கடமையான, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின், இந்த மாடல் அரசுக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.