Asianet News TamilAsianet News Tamil

சிலம்பத்தில் பதக்கங்களை அள்ளி குவித்த மாணவன் கிணற்றில் மூழ்கி பலி - மதுரையில் பரபரப்பு

மதுரையில் பள்ளி விடுமுறையில் நண்பர்களுடன் விவசாய கிணற்றிற்கு குளிக்கச் சென்ற 10ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

10th standard student drowned well water and died in madurai vel
Author
First Published May 17, 2024, 7:17 PM IST | Last Updated May 17, 2024, 7:17 PM IST

மதுரை மாநகர் செல்லூர் சர்ச் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் அவனியாபுரத்தில் கோவில் ஒன்றில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சந்திரா மற்றும் மகன் ராஜேஷ் உடன் வாடகை வீட்டில் வசித்துவருகிறார். இந்நிலையில் அழகர்சாமியின் மகனான ராஜேஷ் (வயது 15) என்ற பள்ளி மாணவன் 10ஆம் வகுப்பு படித்து தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் 11ஆம் வகுப்பு படிப்பதற்கான பள்ளி கட்டணம் செலுத்தியுள்ளனர். 

நான் அப்படி பேசியிருக்க கூடாது, தவறு தான் - போலீசார் முன்னிலையில் வருந்திய சவுக்கு சங்கர்

இதனிடையே பள்ளி விடுமுறை என்பதால் இன்று காலை தனது நண்பர்கள் 4 பேருடன் ராஜேஷ் குளிக்கச் சென்றுள்ளார். மதுரை குலமங்கலம் வடுகபட்டி சாலை பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் இருந்த கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது திடிரென கிணற்று நீரில் குதித்தபோது உள்ளே சென்றுள்ளார். அப்போது மற்ற நண்பர்கள் விளையாட்டுக்காக தண்ணீரில் மூழ்கியதாக நினைத்துள்ளனர்.

நீண்ட நேரமாகியும் வெளியில் வராத நிலையில் நண்பர்கள் அனைவரும் காப்பாற்ற  முயன்றுள்ளனர் ஆனால் முடியவில்லை. இதனையடுத்து அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைக்காமல் ராஜேஷின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் பெற்றோர் அங்கு வருவதற்குள் நீரில் மூழ்கி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அலங்காநல்லூர் காவல்துறையினர் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.

குற்றாலத்தில் திடீர் காட்டாற்று வெள்ளம்; சிறுவன் அடித்து செல்லப்பட்டதால் அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்

உயிரிழந்த பள்ளி மாணவன் ராஜேஷ் சிலம்பாட்டத்தில் சிறப்பாக விளையாடி பல்வேறு பதக்கங்களை பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது. மதுரையில் பள்ளி விடுமுறை நாளில் கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios