வங்கிக் கணக்கில் இந்த லிமிட்டுக்கும் மேல் பணம் எடுக்காதீங்க.. மீறினால் வரி கட்ட வேண்டும்.. எவ்வளவு தெரியுமா?
வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு வரி செலுத்த வேண்டும் என்பதை வங்கி வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வது அவசியம். எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Bank Transaction Limit
உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் எடுக்கலாம். ஆனால் தேவையற்ற வரிகளைச் செலுத்துவதைத் தவிர்க்க, பணத்தை திரும்ப எடுப்பதை கவனமாக திட்டமிட வேண்டும். இதற்கு வரி செலுத்தாமல் ஒரு வருடத்தில் எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பணம் எடுப்பதற்கு கட்டணம் செலுத்தும் விதி ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு மட்டும் அல்ல.
Bank Transaction
வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்கும் இதே விதி பொருந்தும். மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து எவ்வளவு பணம் வேண்டுமானாலும் இலவசமாக எடுக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், வருமான வரிச் சட்டத்தின் 194N பிரிவின் கீழ், ஒருவர் ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால், அவர் டிடிஎஸ் செலுத்த வேண்டும். இருப்பினும், இந்த விதி தொடர்ந்து 3 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யாதவர்களுக்கு மட்டுமே.
Bank Customer
அத்தகையவர்கள் வங்கி, கூட்டுறவு அல்லது தபால் நிலையங்களில் இருந்து ரூ.20 லட்சத்திற்கு மேல் எடுத்தால் டிடிஎஸ் செலுத்த வேண்டும். இருப்பினும், ஐடிஆர் தாக்கல் செய்பவர்களுக்கு இந்த விதியின் கீழ் அதிக நிவாரணம் கிடைக்கும். அத்தகைய வாடிக்கையாளர்கள் டிடிஎஸ் செலுத்தாமல் வங்கி, தபால் அலுவலகம் அல்லது கூட்டுறவு வங்கிக் கணக்கில் இருந்து ஒரு நிதியாண்டில் ரூ.1 கோடி வரை பணத்தை எடுக்கலாம். இந்த விதியின்படி, உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 கோடிக்கு மேல் எடுத்தால், டிடிஎஸ் 2 சதவீதம் கழிக்கப்படும்.
Bank Transaction
கடந்த மூன்று ஆண்டுகளாக நீங்கள் தொடர்ந்து ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால், ரூ.20 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் 2 சதவீத டிடிஎஸ் மற்றும் ரூ.1 கோடிக்கு மேல் எடுத்தால் 5 சதவீத டிடிஎஸ் செலுத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. ஜனவரி 1, 2022 முதல் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான சேவைக் கட்டணத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
ATM transactions
தற்போது வங்கிகள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.21 வசூலிக்கின்றன. இதற்கு முன்பு ஒருவர் 20 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. பெரும்பாலான வங்கிகள் தங்கள் ஏடிஎம்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஐந்து இலவச பரிவர்த்தனைகளை வழங்குகின்றன. இது தவிர மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்தும் மூன்று பரிவர்த்தனைகள் இலவசம். இருப்பினும், மெட்ரோ நகரங்களில், உங்கள் சொந்த வங்கியில் இருந்து மூன்று முறை மட்டுமே பணம் எடுக்க முடியும்.
உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?