கல்யாணத்தில் டுவிஸ்ட்... கவிதாவுக்கு பதில் ரத்னாவின் கழுத்தில் தாலிகட்ட போகும் முத்துபாண்டி - அண்ணா சீரியல்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் தாய் மாமா இந்த கல்யாணம் நடக்காது என்று கவிதாவை அழைத்து கொண்டு கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Anna serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கனிக்கு நடந்த விஷயத்தால் பொண்ணு ராசி இல்லாதவள் என்று பேச தொடங்க தாய் மாமா இந்த கல்யாணம் நடக்காது என்று கவிதாவை அழைத்து கொண்டு கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Zee Tamil Anna serial
அதாவது, முத்துபாண்டிக்கும் கவிதாவின் தாய் மாமாவுக்கும் இடையே வாக்குவாதம் முற்ற சண்முகம் இடையில் புகுந்து இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும், கவிதா என்னுடைய தங்கச்சி. நான் இந்த கல்யாணத்தை நடத்தி வைப்பேன் என்று சொல்ல சௌந்தரபாண்டி டீம் சந்தோசப்படுகின்றனர்.
இதையும் படியுங்கள்... சௌந்தரபாண்டி வீசிய வலையில் வாண்டடாக வந்து விழுந்த ஷண்முகம்.. அண்ணா சீரியலில் காத்திருக்கும் அதிர்ச்சி
Anna serial Update
இதனை தொடர்ந்து சௌந்தரபாண்டி முத்துபாண்டியை கூப்பிட்டு தாலி கட்டும் நேரத்தில் சனியன் குண்டிலியம் பொடியை அக்னி குண்டத்தில் போடுவான், புகையாக கிளம்பும். இந்த நேரத்தில் ரத்னா கழுத்தில் தாலியை கட்டிடு என்று பிளானை சொல்ல இதை கவிதாவின் தாய் மாமா கேட்டு விடுகிறார்.
Anna serial Today Episode
உடனே இந்த விஷயத்தை எல்லாரிடமும் சொல்கிறேன் என்று அவர் வெளியே வர சௌந்தரபாண்டி ஆட்கள் அவரை பிடித்து அடித்து சரக்கு ஊற்றி படுக்க வைத்து விடுகின்றனர். நைட் நேரத்தில் சண்முகம் தூக்கம் வராமல் உலாத்தி கொண்டிருக்க பரணி என்னாச்சு என்று கேட்கிறாள். ஷண்முகம் எனக்கு என்னவோ மனசு ஒரு மாதிரி இருக்கு என சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... கல்யாணம் ஆகி 8 வருஷம் ஆகியும் ஏன் குழந்தை பெத்துக்கல... முதன்முறையாக விளக்கம் அளித்த சாந்தனு கிகி ஜோடி