சௌந்தரபாண்டி வீசிய வலையில் வாண்டடாக வந்து விழுந்த ஷண்முகம்.. அண்ணா சீரியலில் காத்திருக்கும் அதிர்ச்சி
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியத்துக்கு ஸ்கெட்ச் போட்டு சௌந்தரபாண்டி கொடுத்து அனுப்பிய மயக்க மருந்தை கனி குடித்து விட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Anna Serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியத்துக்கு ஸ்கெட்ச் போட்டு சௌந்தரபாண்டி கொடுத்து அனுப்பிய மயக்க மருந்தை கனி குடித்து விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, பரணி உயிரை கொடுத்து கனியை காப்பாற்ற முயற்சி செய்ய சண்முகமும் மற்ற தங்கைகளும் பதற்றம் அடைகின்றனர்.
Zee Tamil Anna Serial
அதே நேரத்தில் விஷயம் அறிந்த ரத்னா கண்ணீருடன் பதறியடித்து கொண்டு மண்டபத்திற்கு ஓடி வருகிறாள். தடுமாறி கீழே விழ போன அவளை தாங்கி பிடிக்கும் முத்துப்பாண்டி உள்ளே அழைத்து வர கனியை பார்த்து கண்ணீர் விட முத்துப்பாண்டி சௌந்தரபாண்டி ஆகியோர் நம்ம பிளான் சக்ஸஸ் என்று சந்தோசப்படுகின்றனர். இந்த நேரத்தில் ஒருவன் காலையில் பேனர் சரிந்து விழுது, இப்போ இந்த சின்ன பொண்ணுக்கு இப்படி ஆகிடுச்சு, இந்த கவிதா ராசி இல்லாதவள் போல.. இந்த கல்யாணம் நடக்க கூடாது என்று சொல்கிறான்.
இதையும் படியுங்கள்... 22 வருடங்களாக தொடரும் நட்பு... இணையத்தை கலக்கும் மெட்டி ஒலி சிஸ்டர்ஸின் ரீ-யூனியன் போட்டோஸ்
Anna Serial Update
உடனே கவிதாவின் தாய் மாமா கோபப்பட்டு நீங்க என்னடா சொல்றது, நான் சொல்றேன் இந்த கல்யாணம் நடக்காது. கவிதாவுக்கு வேற மாப்பிள்ளை பார்த்துக்கறேன் என்று அழைத்து செல்ல சௌந்தரபாண்டி பிளான் எல்லாம் நாசமாக போய்டும் போலயே என்று பதறுகிறான். முத்துபாண்டியை அனுப்பி தடுக்க முயற்சி செய்ய அவனுக்கும் கவிதாவின் தாய் மாமாவுக்கும் இடையே கை கலப்பு ஏற்படுகிறது.
Anna Serial Today Episode
இந்த கல்யாணமே நின்று போகும் நிலைமைக்கு வர அங்கும் வரும் ஷண்முகம் எல்லாரையும் அமைதியாக்கி கவிதா என் தங்கச்சி, இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... படிப்பு முதல்... நடிப்பு வரை பட்ட கஷ்டம் கொஞ்சம் இல்ல! 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கோமதி பிரியாவின் சோகம்!