Priyanka Deshpande: கணவரை பிரிந்தார் பிரியங்கா! விரைவில் இரண்டாவது திருமணம்? அவரின் அம்மாவே சொன்ன விஷயம்!
விஜய் டிவி தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டே அவருடைய கணவரிடம் இருந்து பிரிந்த தகவலை உறுதி செய்துள்ள அவரின் அம்மா, விரைவில் பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளதையும் மறைமுகமாக பேட்டியில் கூறியுள்ளார்.
கஷ்டப்படாமல்யாருக்கும் எதுவும் கிடைத்து விடுவது இல்லை. அப்படிதான் சிறு வயதில் இருந்து கஷ்டப்பட்டு பின்னர் ஒரு தொகுப்பாளினியாக உயர்ந்தவர் பிரியங்கா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கிரிஸ்பி கேர்ள்ஸ் ' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த இவர், பின்னர் அழகிய பெண்ணே, இசை அன்பிளக்ட், போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01h63m5gpbts70j2myw9fehdzc/priyanka-deshpande--3-_300x300xt.jpg)
இதை தொடர்ந்து, சுட்டி டிவி, சன் மியூசிக், சன் டிவி போன்ற தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரியங்கா... தன்னுடைய காதலை பிரவீன் மூலம் விஜய் டிவி தொலைக்காட்சியில், தொகுப்பாளராக நுழைந்தார்.
'சினிமா காரம் காபி' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க துவங்கிய பிரியங்கா, அடுத்தடுத்து 'ஒல்லி பெல்லி', 'சூப்பர் சிங்கர் ஜூனியர்' , 'கலக்க போவது யாரு', 'கிச்சன் சூப்பர் ஸ்டார்', 'கிங்ஸ் ஆப் டான்ஸ்', 'கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்', ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் 6, 7, 8, 9 உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
காமெடியாகவும், கலகலப்பாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி... விஜய் டிவி டிடி-யை பீட் செய்த பிரியங்கா, பிக்பாஸ் சீசன் 5, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஃபர்ஸ்ட் ரன்னர் அப்-பாக மாறினார்.
பிரியங்கா தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்து 15 வருடங்கள் ஆவது... சிறப்பிக்கும் விதமாக எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில், தன்னுடைய அம்மாவுடன் கலந்து கொண்டார். அப்போது பிரியங்காவின் பர்சனல் வாழ்க்கை பற்றி முதல் முறையாக அவரின் அம்மா மனம் திறந்து பேசினார்.
பிரியங்காவின் திருமண வாழ்க்கை குறித்து பேசி அவரது அம்மா, பிரியங்கா ஏற்கனவே தன்னுடைய வாழ்க்கையில் செய்த தவறை போல் இனி செய்யக்கூடாது. அடுத்தது அவர் சரியான ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அந்த வாழ்க்கையில் அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் ஏற்கனவே செய்த ஒரு தவறால் நான் ரொம்ப அவரை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறேன். இனி அது நடக்காது என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார். இதற்கு பிரியங்காவும் அழுது கொண்டே தலையாட்டி இருந்தார்.
Gayathri Raghuram join ADMK : பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார்!
priyanka
இதன் மூலம், பிரியங்கா பிரவீனை விட்டு பிரிந்தது உறுதியாகியுள்ள நிலையில், விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வாய்ப்பிருப்பதை மாறைமுகமாக பிரியங்காவின் அம்மா தெரிவித்துள்ளதாக கூறி ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.