Janhvi Kapoor: அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்டின் வைத்த நைட் பார்ட்டியில் ஜான்வி கபூர்! வைரல் போட்டோஸ்!
ஸ்ரீதேவியின் மூத்த மகளும், நடிகையுமான ஜான்வி கபூர், அம்பானி வீட்டுக்கு இளைய மருமகளாக செல்ல உள்ள ராதிகா மெர்ச்சண்ட்டின் நைட் பார்ட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். இது குறித்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ரிலைன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானிக்கு அவரது நீண்ட நாள் காதலியான ராதிகா மெர்ச்சத்துக்கும் ஜூலை 12-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் நடைபெற இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், அதற்க்கு முன்னரே திருமண கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கிவிட்டது.
அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் முகேஷ் அம்பானி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தது ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியை குஜராத் ஜாம் நகர் பகுதியில் பிரமாண்டமாக நடத்தினார்.
இந்த மூன்று நாட்களும், அங்கு வாழும் மக்களுக்கு 24 மணிநேரமும் உணவு பரிமாறப்பட்டது. அதே போல் இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு உணவு முதல் அவர்கள் தாங்கும் இடம் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருந்தார்.
ரஜினிகாந்த், அமீர் கான், சல்மான் கான், ஷாருக்கான், போனி கபூர், போன்ற பிரபலங்களை அழைத்து வர பிரைவேட் ஜெட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகையும், பாப் பாடகியான ரிஹானா கலந்து கொண்டு அசத்தினார். ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியையே சுமார் 1000 கோடி செலவு செய்து அம்பானி குடும்பத்தினர் செய்த நிலையில், திருமணம் இதைவிட பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியை தொடர்ந்து, ராதிகா மெர்ச்சண்ட்டின் நைட் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார் ஜான்வி கபூர். இதில் ராதிகாவின் தோழிகள், மற்றும் ஆனந்த் அம்பானிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது.
இதுகுறித்த போட்டோஸ், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதில் ஜான்வி கபூர் மற்றும் ராதிகாவின் தோழிகள் பிங்க் நிற நைட் டிரஸ் அணிந்துள்ளனர்.
ராதிகா வெள்ளை நீர் நைட் டிரஸ் அணைந்து... தலையில் கிரோன் ஒன்றையும் வைத்துள்ளார். இந்த சிலம்பர் பார்ட்டியில் அம்பானியின் மூத்த மருமகளும் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.