22 வருடங்களுக்கு பின் விக்ரம் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா? ஹிட் கொடுத்த சீயான்!
விக்ரம் நடிப்பில் வெளியாகி, சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம், 22 வருடங்களுக்கு பின் உருவாக உள்ளதாக கோலிவுட் திரையுலகில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.
இயக்குனர் சரண் இயக்கத்தில், கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி... நடிகர் சீயான் விக்ரமின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய கேங்ஸ்டர் திரைப்படமான ஜெமினி படத்தின் இரண்டாம் பாகம், உருவாக உள்ளதாக கோலிவுட் திரையுலகில் ஒரு பேச்சு அடிபட்டு வரும் நிலையில், இதனை உறுதி செய்யும் விதமாக நடிகர் விக்ரமும் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றையும் போட்டுள்ளார்.
1990 ஆம் ஆண்டு, 'என் காதல் கண்மணி' திரைப்படத்தின் மூலம் இளம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விக்ரம். முதல் படமே இவருக்கு தோல்வியை கொடுத்த நிலையில், இதைத் தொடர்ந்து இவர் நடித்த 'தந்து விட்டேன் என்னை', ' காதல் கீதம்', 'மீரா' போன்ற படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது.
Vikram New Movie
தமிழ் படங்கள் கைகொடுக்காத நிலையில், அதிரடியாக தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடிக்க துவங்கிய விக்ரம், 7 வருடங்களுக்கு மேல் அதில் முழுமையாக கவனம் செலுத்தி வந்தார். எனினும் இவரால் அந்த மொழிகளிலும் நிலையான ஹீரோ என்கிற இடத்தை பிடிக்க முடியாமல் போனது.
எப்படியும் திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டவேண்டும் என்கிற விடாமுயற்சியுடன் இருந்த விக்ரம் 'உல்லாசம்' படத்தில் மீண்டும் தமிழுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அஜித்துடன் இவர் நடித்த இப்படம், இவருக்கு மீண்டும் தமிழில் ஸ்டார்டிங் பாயிண்ட்டாக மாறியது. இதை தொடர்ந்து, 1999 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்த சேது இவருக்கு சீயான் என்கிற பெயரை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது மட்டும் இன்றி, பல விருதுகளையும் வாங்கி கொடுத்தது.
இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் தமிழில் இவர் தேர்வு செய்து நடித்த காசி, ஜெமினி, சாமுராய், கிங், தூள், போன்ற படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றன. இந்நிலையில் நடிகர் விக்ரம் 2002-ஆம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் இரண்டாம் பாகத்தில் 22 வருடங்களுக்கு பின்னர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் சரண் இயக்கி இருந்த இந்த படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக கிரண் ரத்தோர் நடித்திருந்தார். மேலும் கலாபவன் மணி, மனோரமா, வினு சக்கரவர்த்தி, முரளி, சார்லி, ரமேஷ் கண்ணா, தாமு, வையாபுரி, உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். கேங்ஸ்டர் கதையம்சத்துடன் ஆக்சன், காதல், காமெடி, என பக்கா கமர்சியல் திரைப்படமாக வெளியான இப்படத்தில் ஓ போடு என்கிற வசனமும், விக்ரமின் ஸ்டைலும் மிகவும் பிரபலமானது.
Pradeep Ranganathan Salary: இரண்டே படத்தில்... 10 மடங்கு சம்பளத்தை உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்!
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதை உறுதி செய்வது போல், நடிகர் விக்ரம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய சிக்னேச்சர் ஸ்டைலுடன் கூறிய புகைப்படத்தை வெளியிட்டு, போட்டுள்ள பதிவில், "மிக்க நன்றி, என் மேல் உங்கள் அன்பை பொழிவதற்கு. இன்னும் சில தினங்களில், நீங்களே கெஸ் பண்ணுங்க என்னவென்று?? 'ஓ போட மறக்காதீங்க' என தெரிவித்துள்ளார்" இதன் மூலம் கிட்ட தட்ட ஜெமினி பார்ட் 2 உருவாவது உறுதி என கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.