Jyotika Photos: 45 வயதிலும்... 20 வயசு யங் ஹீரோயின் லுக்கில் மாடர்ன் உடையில் கலக்கும் ஜோதிகா! கியூட் போட்டோஸ்!
நடிகை ஜோதிகா, ஸ்ரீகாந்த் படத்தின் புரோமோஷனும் 20 வயது யங் ஹீரோயின் போல் ஜொலிக்கும் அழகில் வந்த போது எடுக்கப்பட்ட போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஜோதிகா, மும்பையை சேர்ந்தவர் என்றாலும்... தமிழ்நாட்டு மருமகளாவார். நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர், ஒட்டு மொத்தமாக சினிமாவில் இருந்து விலகினார்.
திருமணமான சில வருடங்களிலேயே தியா என்கிற மகளை பெற்றெடுத்த இவர், இதை தொடர்ந்து தேவ் என்கிற மகனுக்கும் தாய் ஆனார். தியாவுக்கு தற்போது 15 வயது ஆகும் நிலையில், தேவுக்கு 13 வயதாகிறது.
Kalki 2898 AD Release Date: பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 AD' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
குழந்தைகளுக்காக பல வருடங்கள் சினிமாவில் இருந்து விலகியே இருந்த ஜோ, பிள்ளைகள் வளர்ந்த பின்னர் 2015-ஆம் ஆண்டு கணவர் சூர்யாவின் முழு ஒத்துழைப்புடன் மீண்டும் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.
ஜோதிகா கதையின் நாயகியாக நடித்த இந்த படத்தை, சூர்யா தன்னுடை 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இப்படம் ஜோவுக்கு ஸ்டாங் கம்பேக்காக அமைத்ததோடு, வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.
இந்த படத்திற்கு பின்னர் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடிக்க துவங்கினார். அப்படி இவர் நடித்த ஜாக்பார்ட், மகளிர் மட்டும், நாச்சியார், ராட்சசி, உடன் பிறப்பே, போன்ற படங்கள் முதலுக்கு மோசமில்லாமல் வசூல் செய்தது.
சமீபத்தில் கணவர் சூர்யா மற்றும் குழந்தைகளோடு மும்பையில் குடியேறிய ஜோதிகா... தொடர்ந்து ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான, சைத்தான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, இவரின் கைவசம் இரண்டு ஹிந்தி படங்கள் உள்ளது. மற்ற மொழி படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
ஜோதிகா நடித்துள்ள ஸ்ரீகாந்த் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையின்... இந்த படத்தின் புரோமோஷ நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள செம்ம ஸ்டைலிஷான உடையில் ஜோதிகா வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஜோதிகாவின் லேட்டஸ்ட் லுக்கை பார்த்து ரசிகர்கள்... இவருக்கு 45 வயதா என ஆச்சர்யத்தோடு கேட்பது மட்டும் இன்று, இரண்டு குழந்தைக்கு அம்மா இவர் என சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள் என்றும் தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.