MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • கதறிய தங்கை.. பதறிய அக்கா கவிப்பிரியா.. ரத்த வெள்ளத்தில் பிரசாத் அலறல்.. நடந்தது என்ன?

கதறிய தங்கை.. பதறிய அக்கா கவிப்பிரியா.. ரத்த வெள்ளத்தில் பிரசாத் அலறல்.. நடந்தது என்ன?

கடலூர் பாதிரிக்குப்பத்தில், தனது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரசாத் என்பவரை கவிப்பிரியா என்ற பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் அளிக்க கவிப்பிரியா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

1 Min read
vinoth kumar
Published : Dec 11 2025, 01:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திருமணமாகாத 40 வயது பிரசாத் கொலை
Image Credit : our own

திருமணமாகாத 40 வயது பிரசாத் கொலை

கடலூர் பாதிரிக்குப்பம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பிரசாத் (40). திருமணமாகாதவர். வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இவர் தற்போது அதே ஊரில் சுந்தரமூர்த்தி நகரில் பிரசாத் தனது தாய் ராமதிலகம் (70) ஆகிய இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் தனி அறையில் இருந்த பிரசாத், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அலறியபடி ஓடிவந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனை கண்ட தாய் அழுது கூச்சலிட்டுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் பிரசாத் உயிரிழந்து கிடந்தார்.

24
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
Image Credit : our own

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Related Articles

Related image1
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?
Related image2
பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாள் விடுமுறை! போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
34
பாலியல் ரீதியாக தொல்லை
Image Credit : our own

பாலியல் ரீதியாக தொல்லை

இதனிடையே திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் பக்கத்தில் வாடகை வீட்டில் வசித்த கவிப்பிரியா (30) என்பவர் சரணடைந்தார். அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. கவிப்பிரியா திருப்பாதிரிப்புலியூர் அகில் நாயுடு தெருவில் வசித்து வருகிறார். இவர் பிரசாத் வீட்டின் அருகே வாடகைக்கு குடியிருக்கும் தனது தந்தை வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்நிலையில், பிரசாத் கவிப்பிரியாவின் தங்கைக்கு கடந்த மூன்று நாட்களாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

44
கவிப்பிரியா கைது
Image Credit : Google

கவிப்பிரியா கைது

இதுகுறித்து அவர் கவிப்பிரியாவிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவிப்பிரியா பிரசாத் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. கவிப்பிரியாவின் கணவர் முத்து (35) தலைமறைவாகி இருப்பதால் இந்த கொலையில் அவருக்கு தொடர்பு இருக்குமோ என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
கொலை
காவல் நிலையம்
பெண்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?
Recommended image2
காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!
Recommended image3
சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
Related Stories
Recommended image1
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?
Recommended image2
பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாள் விடுமுறை! போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved