MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..

பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..

கண்ணூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது குழந்தையை, அதன் தாய் சரண்யா பாறையில் மோதிக் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில், நீதிமன்றம் தாய் சரண்யாவை குற்றவாளி என தீர்ப்பளித்து, கள்ளக்காதலனை போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்தது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 21 2026, 04:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தையில் பகுதியை சேர்ந்தவர் பிரணவ். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதிக்கு வியான் என்ற ஆண் குழந்தை இருந்து வந்தது. இந்நிலையில் கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா தனது ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.

25
Image Credit : Asianet News

இந்நிலையில் சரண்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த நிதின் (34) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். இதனையடுத்து உல்லாசத்துக்கு இடையூறாக இருக்கும் குழந்தையை கொலை செய்ய தாய் மற்றும் கள்ளக்காதலன் திட்டமிட்டனர்.

Related Articles

Related image1
4.30 மணிநேரத்தில் 19 பீர்.! போட்டிபோட்டு குடித்த ஐடி ஊழியர்கள்.! தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா!
Related image2
தம்பதியை சுத்துப்போட்ட போலீஸ்! வாகன சோதனை சிக்கிய ரூ.1.18 கோடி ஹவாலா பணம்! நடந்தது என்ன?
35
Image Credit : Asianet News

அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி அதே பகுதியில் உள்ள கடற்கரையில் தடுப்புச்சுவர் போல உள்ள பாறைகளில் குழந்தையை வீசியும், தலையை பாறையில் மோத செய்தும் 2 பேரும் சேர்ந்து கொலை செய்தனர். ஆனால் எதுவும் தெரியாதது போல சரண்யா குழந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் கணவர் பிரணவ் மீது சந்தேகம் இருப்பதாக கூறினார்.

45
Image Credit : Asianet News

போலீஸ் விசாரணையில் குழந்தையை தான் கொலை செய்யவில்லை எனக்கூறிய பிரணவ், மனைவி மீது தான் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். சரண்யாவிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தளிப்பரம்பு கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.

55
Image Credit : stockPhoto

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், குழந்தையை கொன்ற சரண்யா குற்றவாளி என்றும் நிதின் மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். சரண்யா தண்டனை விவரம் இன்று வெளியாக உள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நீதிமன்றம்
குற்றம்
கொலை
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
Recommended image2
பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை.. தட்டிக்கேட்ட தந்தைக்கு மண்டை உடைப்பு
Recommended image3
வழக்கறிஞர் சொல்லி எஸ்.ஐ. மடக்கி கதறவிட்ட அலமேலு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி
Related Stories
Recommended image1
4.30 மணிநேரத்தில் 19 பீர்.! போட்டிபோட்டு குடித்த ஐடி ஊழியர்கள்.! தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா!
Recommended image2
தம்பதியை சுத்துப்போட்ட போலீஸ்! வாகன சோதனை சிக்கிய ரூ.1.18 கோடி ஹவாலா பணம்! நடந்தது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved