- Home
- குற்றம்
- என் பொண்டாட்டி உடனான தொடர்பான கைவிட்டுடு! தட்டிக் கேட்ட கணவர்! வீடு புகுந்து ஜீவா கண்முன்னே!
என் பொண்டாட்டி உடனான தொடர்பான கைவிட்டுடு! தட்டிக் கேட்ட கணவர்! வீடு புகுந்து ஜீவா கண்முன்னே!
வாணியம்பாடியில், கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரமடைந்த பிரேம்குமார் என்பவர், காதலியின் கணவர் அப்புன்ராஜை நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து கத்தியால் சரமாரியாக வெட்டினார். படுகாயமடைந்த அப்புன்ராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்புன்ராஜ். இவரது மனைவி ஜீவா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் மற்றும் 2 வயதில் ஒரு மகன் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜீவா பிரேம்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அவ்வப்போது தனிமையில் சந்தித்து வருகின்றனர். இந்த விவகாரம் தெரியவந்ததை அடுத்து ஜீவாவின் கணவர் அப்புன்ராஜ் பிரேம்குமாரை கண்டித்துள்ளார்.
இதனால் வேறு வழியில்லாமல் ஜீவா பிரேம்குமார் உடனான உறவை துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார் கடந்த 13ம் தேதி நள்ளிரவு அப்புன்ராஜ் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற பிரேம்குமார் அப்புன்ராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அப்புன்ராஜை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் தலை உள்ளிட்ட ஐந்து இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டு அப்புன் ராஜ் உயிருக்கு போராடினார். இவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் பிரேம்குமார் அங்கிருந்து தப்பித்தார். இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த அப்புன் ராஜ்ஜை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் தப்பி ஓடிய பிரேம்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் பிரேம்குமார் தமிழக கர்நாடகா மாநில எல்லையான பாகலூர் பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.