MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திண்டுக்கல்
  • கல்யாணமான 13 நாட்களில் புதுமாப்பிள்ளை விபரீத முடிவு! நெஞ்சில் அடித்து கதறும் குடும்பம்! மனைவி அப்படி என்ன செய்தார்?

கல்யாணமான 13 நாட்களில் புதுமாப்பிள்ளை விபரீத முடிவு! நெஞ்சில் அடித்து கதறும் குடும்பம்! மனைவி அப்படி என்ன செய்தார்?

திருப்பூரில், திருமணமாகி 13 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை, மனைவி உடனான தகராறில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த சோகம்.

1 Min read
vinoth kumar
Published : Nov 17 2025, 11:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காதலித்து திருமணம்
Image Credit : Asianet News

காதலித்து திருமணம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கவுதம் (31). இவர் திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காற்றாலை நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து 7 வயது மகனுடன் தனியாக வசித்து வந்த 29 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது.

24
பெட்ரோல் ஊற்றி தீ குளிப்பு
Image Credit : Google

பெட்ரோல் ஊற்றி தீ குளிப்பு

இதனையடுத்து இருவரும் கடந்த 3-ம் தேதி திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு எடுத்து மூலனூரில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு கணவன் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான கவுதம் யாரும் எதிர்பாராத விதமாக உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் வலியால் அலறிய துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு தீயை அணைத்தனர்.

Related Articles

Related image1
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! நவம்பர் 30ம் தேதி வரை டைம்! மாவட்டங்களின் லிஸ்டை வெளியிட்ட தமிழக அரசு!
Related image2
அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! எத்தனை நாட்கள் விடுமுறை! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
34
புதுமாப்பிள்ளை பலி
Image Credit : our own

புதுமாப்பிள்ளை பலி

இதனையடுத்து தீக்காயம் அடைந்த நபரை அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

44
திருமணமாகி 13 நாட்களில் தற்கொலை
Image Credit : our own

திருமணமாகி 13 நாட்களில் தற்கொலை

இந்த சம்பவம் தொடர்பாக மூலனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கவுதம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 13 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பெண்கள்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
காவல் நிலையம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved