MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • ப்ளீஸ் என்ன விட்டுடு! இனி இப்படி செய்யமாட்ட கதறிய ஸ்ரீபிரியா! விடாத பாலமுருகன்! நடந்தது என்ன? பகீர் வாக்குமூலம்

ப்ளீஸ் என்ன விட்டுடு! இனி இப்படி செய்யமாட்ட கதறிய ஸ்ரீபிரியா! விடாத பாலமுருகன்! நடந்தது என்ன? பகீர் வாக்குமூலம்

கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கோவையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருந்த தனது மனைவியை கணவர் பாலமுருகன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். கொலையின் பின்னர் மனைவியின் சடலத்துடன் செல்பி எடுத்து அதனை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்தார்.

2 Min read
vinoth kumar
Published : Dec 02 2025, 01:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
காதலித்து திருமணம்
Image Credit : Asianet News

காதலித்து திருமணம்

திருநெல்வேலி மாவட்டம் தருவையை சேர்ந்தவர் பாலமுருகன்(34). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா (30) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர்.

25
கள்ளக்காதல் விவகாரம்
Image Credit : Google

கள்ளக்காதல் விவகாரம்

இந்நிலையில், ஸ்ரீபிரியாவுக்கும் அவரது உறவினரான நெல்லையை சேர்ந்த இசக்கிராஜாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீபிரியா தனது குழந்தைகளுடன் கோவைக்கு வந்தார். பின்னர் குழந்தைகளை பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு காந்திபுரத்தில் மகளிர் விடுதியில் தங்கியிருக்கிறார்.

Related Articles

Related image1
ஆம்னி பஸ்சில் வைத்து கல்லூரி மாணவி! வீடியோ காட்டி ஓயாமல்! என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டான் தாயிடம் கதறல்!
Related image2
பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! குஷியில் துள்ளிக்குதித்து ஆட்டம் போடும் மாணவர்கள்!
35
 ஸ்ரீபிரியா அரிவாளால் வெட்டி படுகொலை
Image Credit : our own

ஸ்ரீபிரியா அரிவாளால் வெட்டி படுகொலை

நேற்று காலை 9 மணி அளவில் பாலமுருகன், நெல்லையில் இருந்து கோவைக்கு வந்தார். ஸ்ரீ பிரியா தங்கியிருந்த விடுதிக்கு சென்று மனைவியை சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஸ்ரீபிரியாவை வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்ரீபிரியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

45
 கணவர் பாலமுருகன் கைது
Image Credit : ANI

கணவர் பாலமுருகன் கைது

பின்னர் பாலமுருகன் அவரது சடலத்தின் முன் நாற்காலியில் அமர்ந்து செல்போனில் செல்பி எடுத்தார். அந்த போட்டோவை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்தார். இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் விரைந்து ஸ்ரீபிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக அவரது கணவர் பாலமுருகன் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

55
போலீசில் அளித்த வாக்குமூலம்
Image Credit : our own

போலீசில் அளித்த வாக்குமூலம்

அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் மனைவியிடம் பலமுறை எச்சரித்தும் கள்ளக்காதலை கைவிடவில்லை. அதுமட்டுமல்லாமல் இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டோவை எனக்கு அனுப்பி இருந்தார். இதை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பின்னர் கோவைக்கு சென்று சேர்ந்து வாழலாம் என்று அழைத்த போது அவர் வர மறுத்துள்ளார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நான் இவ்வளவு கூறியும் ,மனைவி கேட்காததால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டு ஸ்ரீபிரியாவின் கழுத்தில் வெட்டி கொன்றேன் என்றார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
கணவன்
மனைவி
காவல் நிலையம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆம்னி பஸ்சில் வைத்து கல்லூரி மாணவி! வீடியோ காட்டி ஓயாமல்! என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டான் தாயிடம் கதறல்!
Recommended image2
காதலனை கொல்லத் தூண்டிய போலீஸ்.. சடலத்துடன் திருமணம் செய்துகொண்ட பெண் பகீர் வாக்குமூலம்!
Recommended image3
ஆன்லைன் மோசடியால் அலறித்துடிக்கும் மக்கள்..! வலைவிரிக்கும் சிபிஐ..! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
Related Stories
Recommended image1
ஆம்னி பஸ்சில் வைத்து கல்லூரி மாணவி! வீடியோ காட்டி ஓயாமல்! என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டான் தாயிடம் கதறல்!
Recommended image2
பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! குஷியில் துள்ளிக்குதித்து ஆட்டம் போடும் மாணவர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved