MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • மூன்று குழந்தைகளை பெத்த பிறகும் கருணாகரனுக்கு வந்த சந்தேகம்.. கண்ணெதிரே துடிதுடித்த கலையரசி! காலையில் பக்கா நாடகம்!

மூன்று குழந்தைகளை பெத்த பிறகும் கருணாகரனுக்கு வந்த சந்தேகம்.. கண்ணெதிரே துடிதுடித்த கலையரசி! காலையில் பக்கா நாடகம்!

வேலூர் அருகே தொழில் நஷ்டம் காரணமாக ஏற்பட்ட தகராறில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், அவர் மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளார். உடல்நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடிய நிலையில், போலீஸ் விசாரணையில் கணவன் கருணாகரன் சிக்கினார்.

1 Min read
Author : vinoth kumar
Published : Jan 03 2026, 09:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் (43). டயர் கடை வைத்துள்ளார். இவரது மனைவி கலையரசி (33). இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் வருமானம் இல்லாமல் கருணாகரன் வீட்டில் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவ்வப்போதும் குடித்துவிட்டு வந்தும் தகராறு செய்துள்ளார்.

24
Image Credit : Asianet News

இந்நிலையில் மனைவி கலையரசியின் நடத்தையில் கருணாகரனுக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் கலையரசியிடம் என்னை விட்டு வேறு யாருடனாவது தொடர்பில் இருக்கிறாயா என கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த கருணாகரன் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த டிசம்பர் 30ம் தேதி இரவு கலையரசி சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார்.

Related Articles

Related image1
ரேஷன் அட்டைதாரர்களே ரெடியா இருங்க.! தேதி குறித்த தமிழக அரசு.! மிஸ் பண்ணிடாதீங்க!
Related image2
பொதுமக்களே அலர்ட்.. சனிக்கிழமை விடுமுறை அதுவுமா ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
34
Image Credit : our own

அப்போது கலையரசி மீது மின்சாரம் பாய்த்து கொலை செய்துவிட்டு பின்னர் காலை எதுவும் தெரியாதது போல அவரது தந்தைக்கு போன் செய்து உங்களுடைய மகள் மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதாக கருணாகரன் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சென்று பார்த்தபோது கலையரசி உயிரிழந்தது தெரியவந்தது. இந்நிலையில் மகளின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாகரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

44
Image Credit : ANI

அதில், மனைவியில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு நன்றாக தூங்கிக் கொண்டிருந்த கலையரசியின் கை மற்றும் கால்களில் ஒயரால் மின்சாரத்தை பாய்ச்சி கொன்று விட்டு காலையில் உடல் நலக்குறைவால் மனைவி இறந்ததாக அவரது பெற்றோரிடம் நாடகமாடியதாக கருணாகரன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கருணாகரனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
7 வருஷ காதல்.. கடைசியில இப்படியா? திருமணம் செய்ய மறுத்த காதலனைப் பழிவாங்கிய காதலி!
Recommended image2
திமுக நிர்வாகி குடும்பத்துடன் எரித்து கொலை.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!
Recommended image3
வருஷத்தின் முதல் நாளிலேயே பதற வைக்கும் பாகிஸ்தான்... இந்தியாவுக்குள் ட்ரோனை அனுப்பிய அட்டூழியம்..!
Related Stories
Recommended image1
ரேஷன் அட்டைதாரர்களே ரெடியா இருங்க.! தேதி குறித்த தமிழக அரசு.! மிஸ் பண்ணிடாதீங்க!
Recommended image2
பொதுமக்களே அலர்ட்.. சனிக்கிழமை விடுமுறை அதுவுமா ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved