MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • புதுச்சேரியில் சிறுமையை சீரழித்த 2 கிரிக்கெட் வீரர்கள்..! ரூமில் பாலியல் சேட்டை..! விரட்டியடித்த ஹோட்டல் நிர்வாகம்

புதுச்சேரியில் சிறுமையை சீரழித்த 2 கிரிக்கெட் வீரர்கள்..! ரூமில் பாலியல் சேட்டை..! விரட்டியடித்த ஹோட்டல் நிர்வாகம்

இந்த சம்பவம் தெரிய வந்ததால் டெல்லி மாவட்ட கிரிக்கெட் வீரர்களை ஹோட்டலில் நிர்வாகம் உடனடியாக வெளியேற்றி வேறு ஹோட்டலுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

1 Min read
Author : Thiraviya raj
Published : Jan 29 2026, 02:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
Image Credit : Asianet News

புதுச்சேரியில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது டெல்லி யு-23 கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தெரிய வந்ததால் டெல்லி மாவட்ட கிரிக்கெட் வீரர்களை ஹோட்டலில் நிர்வாகம் உடனடியாக வெளியேற்றி வேறு ஹோட்டலுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இது குற்றச்சாட்டுகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாக டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்து விசாரணையையும் தொடங்கியுள்ளது,

டெல்லி வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகள்

இதுபோன்ற சம்பவங்கள் விளையாட்டின் கண்ணியத்தை கெடுக்கும், அமைப்பின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளன. ஆனாலும், இதனை மறுத்து, ‘‘வீரர்கள் வெறுமனே இசையைக் கேட்டுக்கொண்டு இருந்ததாகவும், மைனர் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக எந்த வழக்கும் பதிவாகவில்லை என்றும் டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் அமித் குரோவர் கூறினார்.

22
Image Credit : ANI

டெல்லி அணி ரஞ்சி டிராபியின் குரூப்- டி விளையாடும்போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த போட்டியில் அணி வீரர்களில் செயல்பாடுகள் மோசமாக உள்ளது. இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. ஐந்து போட்டிகளை டிரா செய்து, ஒன்றில் தோல்வியடைந்துள்ளது. அவர்கள் அடுத்த போட்டியில் மும்பைக்கு எதிராக ஆடுகின்றனர்.

இந்த முழு விஷயமும் டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கடத்திற்கு ஒரு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானது. விசாரணை முடிந்த பின்னரே உண்மை வெளிப்படும். இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் உலகில் வீரர்களின் நடத்தை, ஒழுக்கம் குறித்து ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளது. டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் இந்த விஷயத்தில் மிகவும் விழிப்புடன் உள்ளது. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கிறது. இந்த விசாரணையின் முடிவு, வீரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதைப் பொருத்திருந்து பார்ப்பது முக்கியம்.

Related Articles

Related image1
தலைக்கு ரூ.1 கோடி வேணும்.. விஜய் வைத்த டிமாண்ட்.. அலறும் தவெக நிர்வாகிகள்..!

About the Author

TR
Thiraviya raj
குற்றம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னையில் பேரதிர்ச்சி! பீகார் இளைஞரின் குடும்பத்தையே கருவறுத்த கொடூர கும்பல்..
Recommended image2
சீனாவில் ஆட்சியை கவிழ்க்கும் டிரம்ப்..! உளவு பார்த்த அமெரிக்கா.. அணு ரகசிய ஃபைல்கள் லீக்..!
Recommended image3
அதிகாலையிலேயே பதறிய தமிழகம்.. பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! யார் இந்த கொட்டு ராஜா?
Related Stories
Recommended image1
தலைக்கு ரூ.1 கோடி வேணும்.. விஜய் வைத்த டிமாண்ட்.. அலறும் தவெக நிர்வாகிகள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved