தலைக்கு ரூ.1 கோடி வேணும்.. விஜய் வைத்த டிமாண்ட்.. அலறும் தவெக நிர்வாகிகள்..!
அந்த லிஸ்டில் இருக்கிறவர்கள் ஆளுக்கு ஒரு கோடி ரூபாயை டெபாசிட் செய்ய சொல்லி பனையூரில் இருந்து தகவல் போய் இருக்கிறது.

தவெக தனித்து நிற்பது என முடிவானதும் போட்டி போட முதலில் ஆர்வம் காட்டிய நிர்வாகிகள் இப்போது பின்வாங்குவதாகக் கூறப்படுகிறது. விருப்பமனுவையே ஆன்லைனில் வாங்கும் முடிவில் விஜய் இருப்பதாகக் கூறப்படுகிறது.
234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இருக்கிறார்களா என தவெகவை நோக்கி கேள்விகள் எழ அதை உறுதி செய்ய அந்த கட்சி ஒரு செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதாவது கட்சியோட மாவட்ட செயலாளர்கள் மூலமாக தேர்தலுக்கு பணம் செலவழிக்கிறவர்கள் யார்? திமுக- அதிமுகவில் சீட்டு கிடைக்காமல் இருக்கிறவர்கள் யார் என ஒரு லிஸ்ட் தயார் செய்ய சொல்லி இருக்கிறது தவெக தலைமை அலுவலகம். இதன்படி தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட 234 வேட்பாளர்கள் கண்டறியப்பட்டு பட்டியல் தயாராயிருக்கிறது.
அந்த லிஸ்டில் இருக்கிறவர்கள் ஆளுக்கு ஒரு கோடி ரூபாயை டெபாசிட் செய்ய சொல்லி பனையூரில் இருந்து தகவல் போய் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் பணத்தை தயார் செய்து வைத்து தலைமைக்கு தகவல் சொன்ன நிலையில் இப்போது எல்லாருமே கூட்டணியே இல்லாமல் தனித்து நிற்க வேண்டுமா? என யோசிப்பதாகக் கூறப்படுகிறது. எப்படியும் கடைசி நேரத்தில் விஜய் என்.டி.ஏ கூட்டணிக்கு போய்விடலாம். அப்படி போனால் ஜெயிக்கிறது நிச்சயம் என பணத்தை தயார் செய்தவர்கள் இப்போது பின் வாங்குகிறார்கள் எனக் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் விருப்ப மனுவையே ஆன்லைனில் வாங்குகிற ஐடியாவில் தவெக இருக்கிறது என கூறுகிறது பனையூர் வட்டாரம்.
