அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்ட காரணம் இதுதான்?... ரகசியத்தை உடைத்த கஸ்தூரி...!
பிக்பாஸ் வீட்டிற்குள் விஜே அர்ச்சனா அனுப்பப்பட்டிருக்க காரணம் இதுவாக தான் இருக்கும் என நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் ஏற்கனவே ரேகா, சுரேஷ், ரியோ, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், சனம் ஷெட்டி உள்ளிட்ட 16 பேர் போட்டியாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில் நேற்று 17வது போட்டியாளராக விஜே அர்ச்சனா வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். வழக்கமாக பிக்பாஸ் வைல்ட் கார்டு ரவுண்ட் கூட ஒருமாதம் கழித்து தான் நடக்கும், ஆனால் இந்த முறை 10 நாளுக்குள் அர்ச்சனாவை களமிறங்கியது ஏன் என தெரியாமல் ரசிகர்கள் தவியாய் தவித்தனர். அதற்கு தற்போது முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான கஸ்தூரி மூலம் விடை கிடைத்துள்ளது.
ஆன்லைன் பேட்டி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசியுள்ள கஸ்தூரி, அர்ச்சனாவின் திடீர் விசிட்டிற்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் இப்போது சுரேஷ், ஆரி, ரேகா இவர்கள் மட்டுமே அந்த வீட்டிற்குள் சத்தம் போடுறாங்க மத்தவங்க எல்லாரும் இருக்குற இடம் தெரிவதில்லை.
இந்த 3 பேர் சொல்லுறதை மத்தவங்க கேட்குறாங்க. இதை கலைச்சிவிட்டு மத்தவங்களையும் கலத்தில் இறக்குறதுக்காக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவை இறக்கிவிட்டிருக்காங்க.
அர்ச்சனா ரொம்ப ஜாலியான பர்ஷன். எண்டர்டெயின்மெண்ட்டானவங்க... அவங்க யார்கிட்டையும் சண்டை போடமாட்டாங்க.... ஆனால் மத்தவங்கள சண்டை போட வைப்பாங்க என்று கூறியுள்ளார்.
அதற்கான ஆரம்பமாக தான் அர்ச்சனா வந்த முதல் நாளே எல்லாருக்கும் ஒரு விருது கொடுப்பது போல் ஆரம்பித்து, நீங்க எல்லாரும் கிளம்பி வாங்க ராசாக்களா? என சண்டையை ஆரம்பித்துள்ளனர் என ரகசியத்தை போட்டுடைத்துள்ளார் கஸ்தூரி.
கஸ்தூரியின் கணிப்பு சரியாக இருக்குமா?... இனி வரும் நாட்களில் பிக்பாஸ் ஆட்டம் சூடுபிடிக்குமா? என்பதை நாம் காத்திருந்து பார்த்தாலே தெரிந்து விடும்.