MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சொந்தக்காரர்களாக இருந்தும் பேசிக்கொள்ளாத விக்ரம் - தியாகராஜன்... தாய்மாமன் உறவை சீயான் தூக்கியெறிந்தது ஏன்?

சொந்தக்காரர்களாக இருந்தும் பேசிக்கொள்ளாத விக்ரம் - தியாகராஜன்... தாய்மாமன் உறவை சீயான் தூக்கியெறிந்தது ஏன்?

தாய் மாமனாக இருந்தும் இயக்குனர் தியாகராஜனிடம் நடிகர் விக்ரம் பேசாமல் இருந்து வருவதற்கான காரணத்தை பிரபலம் ஒருவர் வெளியிட்டு இருக்கிறார்.

2 Min read
Ganesh A
Published : Mar 16 2023, 01:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

கமலுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் அதிகளவில் ரிஸ்க் எடுத்து நடித்த நடிகர் என்றால் அது விக்ரம் தான். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு வந்த விக்ரமுக்கு ஆரம்ப காலகட்டத்தில் படங்கள் பெரியளவில் ஓடவில்லை. இருந்தும் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து உழைத்த விக்ரமுக்கு விஸ்வரூப வெற்றியை கொடுத்த படம் சேது. பாலா இயக்கிய இப்படம் தான் நடிகர் விக்ரமின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

25

இதையடுத்து தொடர்ந்து வித்தியாசமான ரோல்களில் நடித்து தரமான நடிகராக உயர்ந்திருக்கிறார் விக்ரம். இவர் நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் 2 மற்றும் தங்கலான் ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் பொன்னியின் செல்வன் 2 வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மறுபுறம் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தின் ஷூட்டிங் கே.ஜி.எஃப்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

35

தற்போது டாப் நடிகராக இருக்கும் விக்ரம், சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டதற்கு இவரது உறவினரும், பிரபல இயக்குனருமான தியாகராஜனும் அவரது மகன் நடிகர் பிரசாந்தும் தான் காரணம் என அந்த சமயத்தில் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்தன. நடிகர் விக்ரமின் தாய்மாமா தான் தியாகராஜனாம். தன் தாயின் தம்பியான தியாகராஜனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம் விக்ரம்.

இதையும் படியுங்கள்... திருமண விழாவில்... ரஜினி போல் ஸ்டைலாக சிகரெட் பிடித்த பிரபல ஹீரோயின் - காட்டுத்தீ போல் பரவும் ‘புகை’ப்படம்

45

பிரசாந்தின் கெரியர் வீழ்ச்சியை சந்தித்ததற்கு விக்ரம் தான் காரணம் என்றும் அதனால் தான் இருவரும் பேசிக்கொள்வதில்லை எனவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. ஆனால் இருவருக்கும் இடையே உண்மையில் என்ன தான் பிரச்சனை என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது. இந்நிலையில், பிரபல இயக்குனர் ராசி அழகப்பன், விக்ரம் - தியாகராஜன் இடையே என்ன பிரச்சனை என்பதை சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

55

அதன்படி நடிகர் விக்ரம் வீட்டில் நடந்த காதல் விவகாரத்தால் தான் அவர் தியாகராஜனுடன் பேசிக்கொள்ளவில்லை என கூறியுள்ளார். ஆனால் அது யார் என்பதை அவர் வெளியிடவில்லை. அந்த காதல் விவகாரம் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்ததன் காரணமாகவே தாய்மாமன் தியாகராஜனுடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம் சீயான் விக்ரம். 

இதையும் படியுங்கள்...  அப்பாவை கொலை பண்ணிட்டாங்க... அம்மாவும் இல்ல! அனாதை ஆனேன் - கலங்கிய ‘குக் வித் கோமாளி’ விசித்ரா

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved