மீண்டும் உயிர் பெற்று வந்துவிட்டாரா சுஷாந்த்??... அச்சு அசலாக அவர் போலவே இருக்கும் மெழுகு சிலை...!
ரசிகர் ஒருவர் அச்சு அசலாக சுஷாந்த் சிங் ராஜ்புட் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள மெழுகு சிலையின் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
‘எம்.எஸ். தோனி பயோபிக்’, ‘கை போ சே’,‘சிக்கோரே’ உட்பட ஏகப்பட்ட படங்களில் நடித்து பாலிவுட் ரசிகர்களை கவர்ந்த இளம் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புட். கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பை பாந்தராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் அவரது மரண விவகாரத்தில் மர்மம் நீடிப்பதாகவும், பாலிவுட் பிரபலங்கள் சிலர் பட வாய்ப்புகளை தட்டிப் பறித்து அதன் மூலம் ஏற்பட்ட மன உளைச்சலால் தான் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
இதையடுத்து மும்பை போலீசாரிடம் இருந்து சிபிஐக்கு இந்த வழக்கு கைமாறியுள்ளது. மேலும் போதைப்பொருள் விவகாரம் குறித்தும் விசாரணை நீண்டு வருகிறது.
சுஷாந்தின் எதிர்பாராத மரணத்தை அவரது ரசிகர்கள் பலராலும் இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் பலரும் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.
அதனால் தான் அவருடைய மரணத்திற்கு காரணம் என்று கூறப்படும் பாலிவுட் வாரிசு அரசியல் மீது காட்டம் கொண்டு, பிரபல நடிகர், நடிகைகளின் வாரிசுகளை சோசியல் மீடியாவில் விளாசி வருகின்றனர். அதற்கு சமீபத்தில் ஆலியா பட், சோனம் கபூர் ஆகியோர் அதிக பாதிப்புகளை சந்தித்தனர்.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்டு இறந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் போலவே ரசிகர் ஒருவர் அவருடைய மெழுகு சிலையை வடிவமைத்து அசத்தியுள்ளார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ரசிகர் சுகந்தோ ராய் என்பவர், தனது அருங்காட்சியகத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு அழகான ஆளுயர மெழுகு சிலையை செய்து வைத்து அசத்தியுள்ளார்.
மேலும் பார்க்க அச்சு அசலாக சுஷாந்த் சிங் போலவே இருக்கும் அந்த மெழுகு சிலையுடன் நின்று எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் சோசியல் மீடியாவில் பதிவிட, அது இன்றைய ட்ரெண்டிங்காக மாறிவிட்டது.
சுஷாந்த் சிங் ராஜ்புட் மீண்டும் உயிர் பெற்று வந்துவிட்டாரா? என ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு அவரைப் போலவே அச்சு, அசலான சிலையை வடிவமைத்துள்ளார்.
சுஷாந்த் சிங்கின் சிரித்த முகத்தை பார்த்து ரசிகர்கள் வருத்தத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் அழகிய சிரித்த முகத்தை பார்க்கும் ரசிகர்கள் அந்த சிலையை செதுக்கிய சுகந்தோ ராயை பாராட்டி வருகின்றனர்.