மாமனாருடன் பல மணி நேரம் போனில் பேசிய சித்ரா... அழிக்கப்பட்ட ஆதாரங்கள்... அடுத்த அதிர்ச்சி தகவல் இதோ...!
அடிக்கடி கணவருடன் ஏற்பட்ட சண்டை மற்றும் தாயார் - ஹேமந்த் இடையேயான பிரச்சனை காரணமாக சித்ரா தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலை விவகாரத்தில் நாளுக்கு நாள் வெளியாகும் தகவல்கள் நகரங்களை தாண்டி பட்டி, தொட்டி வரை பரவி இருக்கும் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
இரவு நேர படப்பிடிப்பு காரணமாக நசரத்பேட்டையில் உள்ள ஓட்டல் ஒன்றில் விஜே சித்ராவும், அவரை பதிவு திருமணம் செய்து கொண்ட ஹேமந்த் ரவியும் தங்கினர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி அதிகாலை சித்ரா அந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சித்ராவின் கணவர் ஹேமந்த் அந்த சமயத்தில் அறைக்கு வெளியில் இருந்ததும், இரவு முழுவதும் சோசியல் மீடியாவில் மிகவும் சந்தோஷமாக பதிவிட்டு வந்தார் திடீரென தற்கொலை செய்து கொண்டது மிகப்பெரிய சந்தேகங்களை உருவாக்கியது.
இதையடுத்து சித்ராவின் தந்தை அளித்த புகாரின் பேரில் நசரத்பேட்டை போலீசாரும், ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் அடுத்தடுத்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
தற்போது சித்ராவின் கணவர் ஹேமந்த் தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளார். அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சித்ராவின் செல்போன் உரையாடல்கள் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன.
அடிக்கடி கணவருடன் ஏற்பட்ட சண்டை மற்றும் தாயார் - ஹேமந்த் இடையேயான பிரச்சனை காரணமாக சித்ரா தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட அன்று கூட மாமனார் ரவிச்சந்திரன் உடன் சித்ரா பல மணி நேரம் செல்போனில் பேசியது தெரியவந்துள்ளது.
மேலும் செல்போன் ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து சித்ரா அவருடைய மாமனார் உடன் பேசிய ஆடியோ ஆதாரங்களை மீட்ட போலீசார், அதில் ஹேமந்த் மீது சித்ரா கூறியுள்ள புகார்களை அடிப்படையாக வைத்தே அவரை கைது செய்துள்ளனர்.