சூர்யாவை அடுத்து விஜய்சேதுபதி எடுத்த அதிரடி முடிவு... மீண்டும் இப்படி செஞ்சிட்டாரே என கதறும் ரசிகர்கள்...!
இரண்டாவது முறையாக விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தனது பட ரிலீஸ் குறித்த பதிவு ரசிகர்களை அதிர்ச்சி, ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய்
சேதுபதி. தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமும், நட்சத்திர
அந்தஸ்தும் இருந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல்
வில்லன் கதாபாத்திரங்களில் கூட இறங்கி கலக்கி வருகிறார்.
சமூக பிரச்சனை தொடர்பான படங்கள் என்ற கெஸ்ட் ரோலில் கூட இறங்கி களக்குகிறார். அப்படி சமீபத்தில் விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படம் ஓடிடியில் வெளியானாலும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பல பாராட்டுக்களை பெற்றது.
ஏற்கனவே இயக்குனர் எஸ் பி ஜனநாதன் உடன் இணைந்து புறம்போக்கு என்கிற பொதுவுடமை திரைப்படத்தில் 3 ஹீரோக்களில் ஒருவராக நடித்த விஜய்சேதுபதி இப்பொழுது லாபம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சமூக பிரச்சனை தொடர்பான படங்கள் என்ற கெஸ்ட் ரோலில் கூட இறங்கி களக்குகிறார். அப்படி சமீபத்தில் விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படம் ஓடிடியில் வெளியானாலும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பல பாராட்டுக்களை பெற்றது.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்த ஷூட்டிங்கில் பங்கேற்ற விஜய்சேதுபதி கடந்த வாரம் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்தார்.
சமூக அரசியல் குறித்த லாபம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், திரையரங்குகளில் படம் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆனால் படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். பிரபல ஓடிடி தளமான நெட் பிளிக்ஸ் லாபம் திரைப்படத்தை கோடிகளை கொட்டிக்கொடுத்து வாங்கியுள்ளது.
சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த விஜய்சேதுபதியின் லாபம் திரைப்படமும் ஓடிடியில் வெளியாவது தியேட்டர் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுமட்டுமின்றி க/பெ ரணசிங்கம் படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதியின் படம் இரண்டாவது முறையாக ஓடிடியில் ரிலீசாவது குறிப்பிடத்தக்கது.