பிக்பாஸுக்காக இப்படியா?... பிரபல சீரியலை அவசரமாக முடித்த விஜய் டி.வி... கடுப்பில் ரசிகர்கள்...!
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வந்த பிரபல சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறது விஜய் டி.வி. முழுக்க, முழுக்க பொழுது போக்கு நிகழ்ச்சிகளை சிறப்பாக வழங்கி மக்களை மகிழ்வித்து வருகிறது. சீரியல், காமெடி, நடனம், பாடல் என அனைத்து நிகழ்ச்சிகளின் ரேட்டிங்கும் வேற லெவல்.
கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், கே.பி.ஒய் சாம்பியன்ஸ், எங்க கிட்ட மோதாதே என நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, மெளன ராகம், பாண்டியன் ஸ்டோர்ஸ், ஆயுத எழுத்து, நாம் இருவர் நமக்கு இருவர், சரவணன் மீனாட்சி என பல சீரியல்களும் இல்லத்தரசிகளின் விருப்ப பட்டியலில் தனி இடம் பிடித்துள்ளது.
தற்போது நிலவும் கொரோனா பிரச்சனை காரணமாக பல சீரியல்கள் படப்பிடிப்பை முறையாக நடத்த முடியாமல் திண்டாடி வருகின்றன. அதனால் பல சேனல்களில் சீரியல்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சி கூட தனது மெளன ராகம் தொடர் இந்த வாரத்தோடு முடிய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் அதன் பார்ட் 2 விரைவில் வெளியாக உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘ஆயுத எழுத்து’ சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆரம்பத்தில் இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் அஸ்மத் கான் மற்றும் ஸ்ரீத்து கிருஷ்ணன் நடித்து வந்தனர். அதன் பின்னர் அவர்கள் இருவரும் நீக்கப்பட்டு நெஞ்சம் மறப்பதில்லை அவர்கள் ஆனந் என்பவரும் கமிட் ஆனார்கள்.
அதன் பின்னர் நன்றாக போய்க்கொண்டு இருந்த இந்த சீரியல் பிரைம் டைமில் இருந்து நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பானது. இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலை அதிரடியாக நிறுத்தியுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் ஒளிபரப்பிற்காக வேண்டுமென்றேன் ஆயுத எழுத்து சீரியலை சரியான கிளைமேக்ஸ் இல்லாமல் அவசர அவசரமாக முடித்துவிட்டதாக ரசிகர்கள் கோவத்தில் உள்ளனர்.