38 வயதில் காதலரை அறிமுகம் செய்த விஜய் டிவி சீரியல் நடிகை..! விரைவில் டும் டும் டும்..!
மலையாள சீரியல் நடிகையான சந்திரா பல தமிழ் சீரியல்களிலும் படங்களிலும் நடித்து பிரபலமானவர். தற்போது தன்னுடைய 38 வயதில் திருமணம் செய்துகொள்ள உள்ளவர் பற்றிய தகவலை பகிர்ந்துள்ளார்.
candra
மலையாள ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் சந்திரா 'மனசெல்லாம்' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.
candra
ஆனால் இவருக்கு திரைப்படங்கள் கை கொடுக்கவில்லை. எனவே தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை சீரியல்களில் சூஸ் பண்ணி நடிக்க துவங்கினார்.
candra
அந்த வங்கியில் இவர் விஜய் டிவியில் கடந்த 2007-ல் ஒளிபரப்பாகி காதலர்களை வெகுவாக கவர்ந்த சீரியல் தான், "காதலிக்க நேரமில்லை". இதில் கதாநாயகியாக நடித்தான் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக ப்ரஜின் நடித்திருந்தார்.
candra
இதையடுத்து பல தமிழ் மற்றும் மலையாள சீரியல்களில் நடித்து வந்த 38 வயதாகும் இவர் தற்போது 'ஸ்வந்தம் சுஜாதா' என்ற மலையாள சீரியலில் நடித்து வருகிறார்.
35 வயதை கடந்து விட்டதால், இவரிடம் எப்பதுமே திருமணம் குறித்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், முதல் முறையாக தன்னுடைய காதலரை சமூக வலைத்தளத்தில் அறிமுகம் செய்து, விரைவில் திருமணம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.