- Home
- Cinema
- Pandian Stores: வீட்டை விட்டு வெளியேறிய பாண்டியன் - தேடி அலையும் மகன்கள்! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!
Pandian Stores: வீட்டை விட்டு வெளியேறிய பாண்டியன் - தேடி அலையும் மகன்கள்! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 433ஆவது எபிசோடில், மன வேதனையில் பாண்டியன் வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில்.... அவரை தேடி செந்தில், கதிர், பழனிவேல் மூவரும் செல்கின்றனர்.

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' இன்றைய 433 ஆவது எபிசோடானது குமாரவேல் சத்தியம் செய்யும் காட்சியுடன் தொடங்கியது. நேற்றைய எபிசோடில் அவரது பாட்டி சத்தியம் கேட்கும் காட்சியுடன் முடிந்த நிலையில், இன்றைய எபிசோடில் குமாரவேல் தனது அப்பா சக்திவேல் தலையில் அடித்து சத்தியம் செய்கிறார்.
அரசி செய்த நம்பிக்கை துரோகம்
பாண்டியன் தன்னுடைய மகளின் நம்பிக்கை துரோகத்தை தாங்க முடியாமல், வீட்டை விட்டு வெளியேறுகிறார். கோமதி மற்றும் அவரின் மகன்கள் தடுக்க முயன்ற பொதும், அதையும் மீறி அவர் வெளியே செல்கிறார். கோமதி கதறுவதை பார்த்து அவரது அம்மா காந்திமதி வேதனையில் கதறி அழுகிறார்.
Pandian Stores: குமாரவேலுவிடம் சத்தியம் கேட்கும் பாட்டி! பாண்டியனை அசிங்கப்படுத்தும் சக்திவேல்!
கோமதி அழுவதை பார்த்து கதறும் காந்திமதி
5 பிள்ளைகளை பெற்றும் ஒரு பிள்ளையால் கூட அவள் சந்தோஷமாக இல்லையே என்று வேதனை படுகிறார். அரசியிடம் இப்போது உனக்கு நிம்மதியா? நல்லா இருந்த மனுஷனை இப்போ விட்டு வெளியே அனுப்பிடியே என தன்னுடைய ஆதங்கத்தை கொட்டுவதோடு, குடும்ப மானம், கௌரவத்தை இப்படி சீர்குலைத்துவிட்டதே, யாருக்கு எந்த கெடுதல் பண்ணுனோம், எங்களுடைய குடும்பம் இப்படி ஆகிவிட்டதே என்று கோமதி அழுது புலம்புகிறார்.
கால் போன போக்கில் நடந்து போகிறார் பாண்டியன்:
வீட்டைவிட்டு சென்ற பாண்டியன் எங்க போனார், என்ன செய்கிறார் என்று தெரியாமல் செந்தில், கதிர், பழனிவேல் ஆகியோர் தேடி செல்கிறார்கள். அவர் கடைக்குத்தான் போயிருப்பார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஒரு புறம் இருந்தாலும், பாண்டியன் வெளியில் சென்ற போது மழை பெய்வதால், மழையில் நனைந்தபடி கோயிலுக்கு சென்றார். அப்படியே கால் போன போக்கில் நடந்து சென்று நிலைகுலைந்து அமர்கிறார்.
Pandian Stores: சண்டை போட்ட பழனி; குமரவேலுக்கு விழுந்த தர்ம அடி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!
அரசி குறித்த பிளாஷ் பேக்
இதன் பின்னணியில் பாடல் காட்சியோடு.... பாண்டியன் அரசியை எப்படியெல்லாம் வளர்த்தார் என்று பிளாஷ்பேக் காட்சியாக காட்டப்படுகிறது. கடைசியாக நீ எப்படி அவனை காலிச்ச, என்னிடமாவது சொல்லிருக்கலாம் இல்ல, நான் ஏதாவது ஐடியா கொடுத்திருப்பேன் என்று ராஜீ, அரசிக்கு ஆறுதல சொல்கிறார். அதோடு இன்றைய 433ஆவது எபிசோடு முடிகிறது.
வீடு திரும்புவாரா பாண்டியன்:
இனி நாளை பாண்டியன் வீட்டிற்கு திரும்ப வருவாரா என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்கிறது. அப்படி திரும்ப வரும் பாண்டியனின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். அரசியிடம் பேசுவாரா? பேசமாட்டாரா அரசியின் கல்யாண பேச்சு துவங்குமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
Pandian Stores Update: அரசியின் மொபைலை செக் பண்ணிய சரவணன்; பீரோவில் கோமதிக்கு காத்திருந்த அதிர்ச்சி?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.