பாண்டியன் ஸ்டோர் முல்லையா இது? கையில் வீணையுடன் விதவிதமான போஸ்..! வேற லெவல் போட்டோஸ்..!
நிச்சயதார்த்தத்திற்கு பிறகும் தொடர்ந்து விதவிதமான கெட்டப்பில், போஸ் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அல்லி வரும், வி.ஜே.சித்ரா தற்போது கையில் வீணையுடன், போஸ் கொடுத்து அசரவைத்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களிலேயே அதிகம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.
அண்ணன், தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்ட ஒரு சாதாரண குடும்பத்தின் கதையை அழகாக சொல்லும் இந்த சீரியல், தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடத்திலும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் பல ஜோடிகள் இருந்தாலும் கதிர் - முல்லை ஜோடிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
முல்லை கதாபாத்திரத்தில் தொகுப்பாளினி, நடிகை, மாடலிங் என பல்வேறு துறைகளில் கலக்கிய சித்ரா நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த சித்ரா, சன் டி.வியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா சீரியல் மூலமாக நடிக்க ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த சித்ரா, சன் டி.வியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா சீரியல் மூலமாக நடிக்க ஆரம்பித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவிற்கும் தொழிலபதிர் ஹேமந்த் என்பவருக்கும் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த போட்டோக்கள் கூட சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.
நிச்சயதார்த்தத்திற்கு பின் வருங்கால கணவர் உடனும் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
விரைவில் இவருடைய திருமணம் இருந்தாலும், தொடர்ந்து விதவிதமான கெட்டப்பில் போஸ் கொடுத்து ரசிகர்களை அசர வைக்கிறார்.
அந்த வகையில் தற்போது கையில் வீணையுடன் இவர் கொடுத்துள்ள போஸ் பலரையும் கவர்ந்துள்ளது.
தங்க நிற சேலையில்... தலை நிறைய பூ என சங்கீத ஸ்வரங்களை ரசித்தபடி போஸ் கொடுத்துள்ளார்.
கொள்ளை அழகில் இருக்கும் முல்லைக்கு லைக்குகள் அள்ளுகிறது.