- Home
- Cinema
- Vadivel Balaji : சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறாங்க! வறுமையால் கலங்கி நிற்கும் வடிவேல் பாலாஜி குடும்பம்
Vadivel Balaji : சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறாங்க! வறுமையால் கலங்கி நிற்கும் வடிவேல் பாலாஜி குடும்பம்
Vadivel Balaji : உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார். அவரது குடும்பத்தின் தற்போது வறுமையால் வாடி வருவதாக கூறப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் மிகவும் பேமஸ் ஆனது அது இது எது எனும் நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சி மிகவும் பிரபலம் அடைய முக்கிய காரணம் இருவர் தான். ஒன்று சிவகார்த்திகேயன், மற்றொன்று வடிவேல் பாலாஜி. சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக அந்நிகழ்ச்சியில் கலக்க, மறுபுறம் அதில் வரும் சிரிச்சா போச்சு சுற்றில் பல வேடங்களில் வந்து பலரை மனதார சிரிக்க வைப்பார் வடிவேல் பாலாஜி.
இவ்வாறு தனது நகைச்சுவைகளால் மக்களை சிரிக்க வைத்த வடிவேல் பாலாஜி, கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு சின்னத்திரை மற்றும் சினிமா வட்டாரத்தையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவருடன் பணியாற்றிய காமெடி நடிகர்கள் அனைவரும் கலங்கிப் போயினர்.
சின்னத்திரையில் மிகவும் பேமஸானவராக வடிவேல் பாலாஜி இருந்தாலும், அவர் இருக்கும்போதே அவரது குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு தான் வந்துள்ளது. அவர் இறந்தபோது ஏராளமானோர் வடிவேல் பாலாஜியின் குடும்பத்திற்கு உதவுவதாக தெரிவித்து இருந்தனர். குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன், வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்பதாக அறிவித்தார்.
இதையும் படியுங்கள்... கொரோனா பாதிப்பு காரணமாக இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி... பொன்னியின் செல்வன் பட பணிகள் முடக்கம்
நடிகர் வடிவேல் பாலாஜி இறந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவரது குடும்பத்தின் தற்போதைய நிலை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனல் ஒன்று வடிவேல் பாலாஜி வாழ்ந்த வீட்டிற்கு சென்று அவரது மனைவியிடம் நேர்காணல் நடத்தியது. அப்போது அவர் தாங்கள் கஷ்டப்படுவதை வெளியில் கூற மறுத்துவிட்டார். அவரது விடும் ஆங்காங்கே சேதமடைந்த நிலையில் தான் இருந்தது.
இதையடுத்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது, வடிவேல் பாலாஜியின் குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதாக தெரிவித்தனர். 2 வேளை சாப்பாட்டிற்கே அவர்கள் கஷ்டப்படுவதாக கூறினர். வடிவேல் பாலாஜி இறந்த சமயத்தில் சில பிரபலங்கள் வந்து உதவியதாகவும், தற்போது யாரும் இங்கு வந்து அவர்களை பார்ப்பதில்லை என தெரிவித்தனர். காமெடியால் கண்கலங்கும் அளவிற்கு சிரிக்க வைத்தவர் வடிவேல் பாலாஜி. தற்போது அவரது குடும்பத்தின் வறுமை நிலை பார்த்த பலரும் கண்கலங்கிப் போய் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... ஒரே படத்தில் ரஜினி - கமல்..வேற லெவலில் தயாராகும் லோகேஷ் கூட்டணி!