விஜய் டிவி சின்னத்தம்பி சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் நடித்து நடிகை ஸ்வேதாவிற்கு கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், தற்போது அழகிய குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இவர்க்கு ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சென்னையை சேர்ந்த சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகை ஸ்வேதா
'தாயுமானவர்' சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், இதை தொடர்ந்து 'விருத்தாச்சலம்', 'கவண்' உள்ளிட்ட பங்களிலும் நடித்துள்ளார்.
மேலும், தாமரை, பொன்மகள் வந்தால், சின்னத்தம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளை கவர்ந்தார்.
இவருக்கும் வெங்கட் என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின் ஒரு சில சீரியல்களில் நடித்து வந்தாலும், கர்ப்பமாக ஆன பின்னர் சீரியல்களில் இருந்து முழுமையாக விலகினார்.
இந்நிலையில் இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து பலர் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.