விஜய், அஜித், ரஜினி போல் ஒரு நடிகர் பாலிவுட் திரையுலகில் இருந்திருந்தால் சுஷாந்த் இறந்திருக்க மாட்டார்! ஏன்?
பல படங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்தும், பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்களின் சூழ்ச்சியால் இன்று இந்தி திரையுலகம் சுஷாந்த் சிங் என்கிற திறமையான நடிகரை இழந்து நிற்கிறது.
மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்படும் நிலையில், இதுவரை அவருடைய வீட்டில் இருந்து கடிதம் ஏதும் கைப்பற்றப்படாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான சஞ்சய் நிருபம் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டிருந்தார்.கடந்த ஆண்டு சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியான சிச்சோரே படத்திற்கு பிறகு அவர் 7 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்ததாகவும், கடந்த 6 மாதங்களில் சுஷாந்த் கைவசம் இருந்த அத்தனை படங்களும் கைநழுவி போனதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிலர் சுஷாந்தின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதனால் சுஷாந்திற்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் தகவல்கள் வெளியானது.
இதனிடையே சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை விவகாரத்தில் அதிரடி திருப்பமாக சல்மான் கான் உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான், சஞ்சய் லீலா பன்சாலி, ஏக்தா கபூர், கரண் ஜோஹர் உள்ளிட்ட 8 பேர் மீது, பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்க தமிழ் திரையுலகை சேர்ந்த ரசிகர்கள், கோலிவுட் திரையுலகில், இளம் நடிகர்கள் பலரை ஊக்குவிக்கும் விதத்தில் பெருந்தன்மையோடு நடந்து கொள்ளும், விஜய், அஜித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற பிரபலங்கள் அவருக்கு தட்டி கொடுத்து ஊக்குவித்திருந்தால் திறமையான நடிகர் இறந்திருக்க மாட்டார் என கூறி வருகிறார்கள்.
அஜித் கொடுத்த ஊக்கத்தால் தான், இன்று பல படங்களில் அருண் விஜய் மீண்டும் ஹீரோவாக நடித்து வருகிறார்.
விஜய் கொடுத்த ஊக்கம் தான் இன்று சிவகார்த்திகேயனுக்கு தைரியம் கொடுத்து அவரை முன்னணி நடிகராக வலம் வர வைத்துள்ளது.
எந்த நடிகர் சிறப்பாக நடித்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் ஆளாக போன் செய்து தன்னுடைய பாராட்டை தெரிவித்து வருகிறார். எனவே கோலிவுட் திரையுலகை பெருமையாக பேசி வருகிறார்கள் ரசிகர்கள்.