MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 10 படத்துல நடித்த கங்கனாவுக்கு பத்மஸ்ரீ விருதா..! இதெல்லாம் ரொம்ப ஓவர் - மத்திய அரசை சாடிய வாரிசு பட நடிகை

10 படத்துல நடித்த கங்கனாவுக்கு பத்மஸ்ரீ விருதா..! இதெல்லாம் ரொம்ப ஓவர் - மத்திய அரசை சாடிய வாரிசு பட நடிகை

பல ஆண்டுகளாக தென்னிந்திய நடிகைகளை மத்திய அரசு புறக்கணித்து வருவது வேதனையாக இருப்பதாக வாரிசு பட நடிகை ஜெயசுதா தெரிவித்துள்ளார்.

1 Min read
Ganesh A
Published : Dec 28 2022, 12:33 PM IST| Updated : Dec 28 2022, 12:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

1970-களில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. இவர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக வம்சி இயக்கத்தில் உருவாகி உள்ள வாரிசு படத்தில் கூட நடிகர் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளார் ஜெயசுதா.

24

இவர் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது மத்திய அரசி தென்னிந்திய நடிகைகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தனது ஆதங்கத்தை பதிவு செய்தார். அதில் அவர் பேசியதாவது : “பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு பத்மஸ்ரீ விருதுகள் கொடுத்துள்ளனர். அவர் சிறந்த நடிகை தான், ஆனாலும் வெறும் 10 படங்களில் மட்டுமே நடித்துள்ள அவருக்கு இவ்வளவு பெரிய விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்... bollywood superstar: என்ன தான் பண்ணுவாரு? 57 வயசிலும் சல்மான் கான் பிட்டாக இருக்க என்ன காரணம் தெரியுமா?

34

என்னைப்போன்ற ஏராளமான தென்னிந்திய நடிகைகள் ஏராளமான படங்களில் நடித்திருந்தும், இன்னும் நாங்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்படாமல் தான் இருக்கிறோம். 40 படங்களுக்கு மேல் டைரக்ட் செய்து கின்ன்ஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இயக்குனர் விஜய நிர்மலாவுக்கு கூட இதுபோன்ற உயரிய விருதுகள் கிடைத்ததில்லை.

44

இப்படி பல ஆண்டுகளாக தென்னிந்திய நடிகைகளை மத்திய அரசு புறக்கணித்து வருவது வேதனையாக இருக்கிறது. அவர்களுக்கும் தகுந்த மரியாதை கிடைக்க வேண்டும்” என நடிகை ஜெயசுதா அந்த நேர்காணலில் பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு தென்னிந்திய திரையுலகினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... மீண்டும் சோழ தேசத்துக்கு செல்ல ரெடியா... பொன்னியின் செல்வன் 2 பற்றி வெளியாக உள்ள சர்ப்ரைஸ் அப்டேட் இதுதான்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கங்கனா ரனாவத்
Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகா காட்டேரியாக மிரட்டிய ‘தம்மா’ ஓடிடியில் எப்போ ரிலீஸ் ஆகுது தெரியுமா?
Recommended image2
கும்பாபிஷேகத்தை நிறுத்த காளியம்மாள் போட்ட பிளான் – போலீசிடம் உதவி கேட்ட கார்த்திக்!
Recommended image3
பிக் பாஸ் பவித்ரா நடித்த ‘ரேகை’ வெப் சீரிஸ்... ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved