விஜய்யை அடுத்து அஜித் பற்றி பேசி உருகிய வனிதா..! ட்விட்டரில் இணைந்த கையோடு மாஸ் பதிவு!
விஜய்யை அடுத்து அஜித் பற்றி பேசி உருகிய வனிதா..! ட்விட்டரில் இணைந்த கையோடு மாஸ் பதிவு!
சரியாக இன்றுடன் வனிதா 3 ஆவது திருமண வாழ்க்கையில் இணைந்து ஒரு மாதம் ஆகிறது. ஆனால் இவருடைய திருமண சர்ச்சை மற்றும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைத்த பாடு இல்லை.
பீட்டர்பால் என்பவரை வனிதா திருமணம் செய்துகொண்ட பின், பீட்டர் பால் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர், கணவர் தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். தன்னுடைய கணவர் பிள்ளைகளுக்காகவாது மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என போராடி வருகிறார்.
இந்த பிரச்சனை காவல் நிலையம் சென்று, கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனையில், பீட்டர் பால் மனைவிக்கு நீதி வேண்டும் என, சமூக வலைத்தளத்தில்.... வாயால் பேசியே நீதி கேட்டவர்கள், நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர், சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன் ஆகியோர்.
இதற்கு வனிதாவும், தன்னுடைய பர்சனல் விஷயங்கள் பற்றி, வாய்க்கு வந்தபடி, விமர்சனம் செய்தவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அதிர வைத்தார்.
இந்த நிலையில் வனிதா கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென டுவிட்டரில் வனிதாவுக்கு எதிராக தொடர்ந்து பலர் ட்விட் போட்டதால், ட்விட்டர் தளத்தில் விலகுவதாகவும் டுவிட்டரில் போராளிகளுடன் வாதம் செய்ய விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார். ஏற்கனவே ஒரு முறை விஜய் குறித்தும் அவருடன் சந்திரலேகா படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிய வனிதா இந்த முறை அஜித் பற்றி ட்விட்டர் பக்கத்தில் பேசியுள்ளார்.
அஜித்தின் வளர்ச்சி நம்ப முடியாதது ஆனால் உண்மை. நாங்கள் அனைவரும் ஒரே நேரத்தில்தான் சினிமாவில் நுழைந்தோம். சினிமாவில் சிறந்ததையும் மோசமானதையும் பார்த்தோம்.
அஜித் அவர்கள் இந்த வெற்றிக்கு மிகவும் தகுதியானவர். நான் சந்தித்த மிக உண்மையான, எளிமையான, மனிதர்களில் ஒருவர் நீங்கள். கடவுள் உங்களுக்கு அனைத்து சிறப்புகளையும் கொடுப்பார். ஷாலுவுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
வனிதாவின் இந்த டுவிட்டுக்கு அஜித் ரசிகர்கள் சிலர் ஆதரவு கொடுத்தாலும் சிலர் வழக்கம் போல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.