வனிதாவுக்கு 3 ஆவது கல்யாணம் கன்ஃபாம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா?
பிக்பாஸ் பிரபலம் வனிதாவுக்கு, ஜூன் 27 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக வெளியான தகவல், உண்மை என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதே போல் மூன்றாவதாக வனிதா திருமணம் செய்து கொள்ள உள்ள அந்த நபர் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய்க்கு ஜோடியாக, கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான, சந்திரா லேகா என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், நடிகை வனிதா விஜயகுமார்.
இந்த படத்தை ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர், பின்னர் பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்த நடிகரும், தொழிலதிபருமான ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து 2005 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.
இதை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், இவரிடம் இருந்தும் 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.
வனிதாவின் மூத்த மகன், முதல் கணவரிடம் உள்ள நிலையில் தன்னுடைய இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார் வனிதா.
தன்னுடைய குழந்தைகளுக்காக கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இருந்தே தேவை இல்லாமல் மற்றவர்கள் பிரச்சனையில் மூக்கை நுழைத்து சிறு பிரச்னையை கூட பெரிதாக அம்மணி மாற்றி வந்ததால், மக்களிடம் குறைவான வாக்குகளை பெற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் தன்னுடைய உடல் எடையை குறைத்து, ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கும் நடிகை வனிதா மூன்றாவதாக ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக ஒரு தகவல் காட்டு தீ போல் பரவி வருகிறது.
இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாமல் இருந்த நிலையில், பிரபல இணைய தல ஊடகம் ஒன்றின் மூலம் தன்னுடைய திருமணத்தை வனிதா உறுதி செய்துள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ள உள்ளவர் பற்றிய தகவலையும் வெளியிட்டுள்ளார்.
வனிதாவை திருமணம் செய்து கொள்ள போகும் நபர் பெயர் பீட்டர் பால் என்றும், அவர் ஒரு பிலிம் மேக்கர் என தெரிவித்துள்ளார். தற்போது பெரிய ப்ரொஜெக்ட்டில் வேலை செய்து வருவதாகவும், அந்த ப்ரொஜெக்ட்டில் தானும் ஒரு அங்கமாக இருப்பதாக வனிதா தெரிவித்துள்ளார். தன்னுடைய யூ டியூப் சேனல் துவங்க நிறைய உதவிகள் செய்துள்ளார். பாலிவுட், ஹாலிவுட், என வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவருடைய திருமண பத்திரிக்கை என கூறி, ஒரு அழைப்பிதழும் வெளியாகியுள்ளது. இதில் வனிதாவுக்கு இந்த மாதம் (ஜூன் 27 ) ஆம் தேதி வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.