அடுத்த ஆப்பு இவங்களுக்குத் தான்... பட்டியலை வெளியிட்டு பகீர் கிளப்பிய வனிதா...லிஸ்டில் இருப்பது யார் தெரியுமா?
தன்னைப் பற்றியும், பீட்டர் பால் உடனான திருமண விவகாரம் குறித்தும் சோசியல் மீடியாவில் தரக்குறைவாக விமர்சித்து வருபவர்கள் மீது புகார் அளித்துள்ளதாக பிக்பாஸ் புகழ் வனிதா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
வனிதா - பீட்டர் பால் திருமண விவகாரம் லாக்டவுன் நேரத்தில் வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் பலரது வாய்க்கும் அவுல் கொடுத்தது போல் ஆகிவிட்டது.
ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் என எதை திறந்தாலும் முதலில் நிற்பது வனிதா பஞ்சாயத்து தான். வனிதாவின் திருமண விவகாரம் குறித்து தெரிந்தவர்கள் கருத்து தெரிவிப்பதை விட எதைப்பற்றியும் தெரியாத சிலர் தன்னைப் பற்றி அவதூறாக பேசிவதாக வனிதா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
குறிப்பாக சூர்யா தேவி என்ற பெண்ணும், தயாரிப்பாளர் ரவீந்திரனும் தன்னைப் பற்றி யூ-டியூப் இண்டர்வியூவில் தரக்குறைவாக விமர்சிப்பதாக குற்றச்சாட்டி வந்த வனிதா, இருவர் மீதும் போரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
வனிதாவின் புகார் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், யூ-டியூப்பில் அவரைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்து வந்த சூர்யா தேவி என்ற பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வனிதா கொடுத்த கொலை மிரட்டல் புகாரின் பேரில் சூர்யா தேவியை கைது செய்த போலீசார் வடபழனி காவல்நிலையத்தில் வைத்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள வனிதா, என்னுடைய பர்சனல் குறித்து பலரும் யூ-டியூப் சேனலில் தரக்குறைவாக இண்டர்வியூ அளித்து வருகிறார்கள். சோசியல் மீடியாவை திறந்தாலே என்னுடைய பெயர் தான் அடிபடுகிறது. அதனால் தான் ட்விட்டரில் இருந்து விலகினேன்.
என்னைப் பற்றி அவதூறாக பேசிய சூர்யா தேவியை சட்டத்தின் கையில் ஒப்படைத்துவிட்டேன். அடுத்து லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கூறியுள்ளேன்.
தயாரிப்பாளர் ரவீந்திரன் எல்லாம் ஒரு ஆம்பளையா?. ஒரு பொண்ணுக்கு சப்போர்ட் பண்றத சொல்லிட்டு எப்படி ஒரு ஆணை அசிங்கப்படுத்தலாம். பீட்டர் பாலை அடிப்பேன், உதைப்பேன் என தரக்குறைவாக பேச அவர் யார். தொடர்ந்து யூ-டியூப் சேனலில் என்னைப் பற்றி அவதூறு பரப்பி வரும் அவர் மீதும் புகார் அளித்துள்ளேன்.
நாஞ்சில் விஜயன் என்பவரை யார் என்றே எனக்கு தெரியாது. அவருக்கும் சூர்யா தேவிக்கும் ஏதோ தொடர்பு உள்ளது, அதனால் அவர் என்னைப் பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதனால் அவர் மீது புகார் அளித்துள்ளேன் என தன்னைப் பற்றி விமர்சித்தவர்களை பட்டியலிட்டு தூக்க தீர்மானித்துள்ளார் வனிதா.