வனிதாவின் மூன்றாவது திருமணத்தால் ஏற்பட்ட நிலை... தவிக்கும் மகன் ஸ்ரீஹரி... கணவர் ஆகாஷின் தற்போதைய மனநிலை!
வனிதாவின் மூன்றாவது திருமணத்தால், அவருடைய மகன் மற்றும் கணவரின் நிலை குறித்து, இவர்களுக்கு நெருக்கிய நண்பர் ஒருவர் கூறியுள்ள தகவல் தற்போது அனைவராலும் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தற்போது சோசியல் மீடியாவில் பேசு பொருளாக மாறியுள்ளது பீட்டர் பாலுடனான வனிதாவின் 3வது திருமணம். கடந்த மாதம் ஜூன் 27 ஆம் தேதி நடந்து முடிந்தது. திருமணம் முடிந்ததில் இருந்து தினமும் ஒவ்வொரு பிரச்சனைகளாக சந்தித்து வருகிறார் வனிதா.
அந்த வகையில் திருமணம் ஆன இரண்டாவது நாளே, முறையாக விவகாரத்து பெறாமல் தன்னையும், தனது பிள்ளைகளையும் தவிக்கவிட்டு பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பீட்டர் பால் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் அளித்துள்ளார்.
அதுமட்டுமின்றி பீட்டர் பாலுக்கு வேலை இல்லை, அவர் ஒரு குடிகாரர், பெண்கள் பின்னால் சுற்றுபவர் என்பது போல் எல்லாம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மேலும் இந்த திருமணம் குறித்து பேசிய வனிதாவின் லாயர், கிறிஸ்துவ முறைப்படி நடத்தப்படும் திருமணத்தை நீங்கள் சாதாரணமாக வீட்டில் நடத்த முடியாது. குறைந்தபட்சம் அந்த திருமணத்தை நடத்த பாஸ்டர் வேண்டும். திருச்சபையில் 3 முறை அறிவிக்க வேண்டும். அதற்கு யாராவது மறுப்பு தெரிவிக்கவில்லை என்றால் மட்டுமே ஒப்புதல் கிடைக்கும். முதலில் வனிதா ஒரு இந்து, அவர் மதம் மாற வேண்டும். பீட்டர் பால் இந்து மதத்திற்கு மாறவே முடியாது. இதையெல்லாம் தாண்டி இவர்கள் ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட் படி திருமணம் செய்ய வேண்டும் என்றாலும் 15 நாட்கள் கால அவகாசம் தேவைப்படும் என கூறினார். எனவே இது ஒரு நிச்சயதார்த்தம் போல் மட்டுமே இருந்ததாக தெரிவித்தார்.
இது ஒருபுறம் இருக்க, வனிதா அவ்வப்போது, கணவர் பீட்டர் பால்லுடன், முத்த புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
இதற்கு பல்வேறு விமர்சனங்கள் இவரை சுற்றி வருகிறது. குறிப்பாக சூர்யா தேவி என்பவர் விமர்சிப்பது தாங்க முடியாமல், வனிதா போலீசில் கூட அவரை பற்றி புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், வனிதாவின் மூன்றாவது திருமணம்தான், அவருடைய மகன் மற்றும் முதல் கணவர் நிலை குறித்து நண்பர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் ஸ்ரீஹரி மனம் நோக கூடாது என்பதற்காக, அவருடைய நண்பர்கள் இந்த விஷயம் குறித்து பேசுவது இல்லை. சமூக வலைத்தளத்தில் புகைப்படம் போட்டதால் யாரவது, வனிதா பற்றி கேள்வி கேட்பார்கள் என்கிற பய உணர்வு ஸ்ரீஹரி மனதில் இருப்பதால், அவர் சமூக வலைத்தளம் பக்கமே வராமல், மனசோர்வுடன் வீட்டிலேயே முடங்கியுள்ளார்.
மேலும் ஆகாஷ் பற்றி கூறிய அவர், தோலுக்கு மேல் வளர்ந்த பையனை, எப்படி சமாதானம் செய்வது என மிகுந்த மன உளைச்சலில் உள்ளார் என அந்த நபர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.