MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நிலநடுக்கத்தால் துருக்கியில் மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன... கவிதை மூலம் கண்ணீர் சிந்திய வைரமுத்து

நிலநடுக்கத்தால் துருக்கியில் மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன... கவிதை மூலம் கண்ணீர் சிந்திய வைரமுத்து

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களுக்காக கவிஞர் வைரமுத்து கண்ணீர்மல்க கவிதை ஒன்றை எழுதி உள்ளார்.

1 Min read
Ganesh A
Published : Feb 08 2023, 08:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

துருக்கியில் கடந்த பிப்ரவரி 6-ந் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு அடுக்குமாடி கட்டிடங்களும், வணிக வளாகங்களும் இடிந்து தரைமட்டம் ஆகின. அதுமட்டுமின்றி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உலகையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

24

நிலநடுக்கத்தால் உருகுலைந்து போன துருக்கிக்கு உலக நாடுகள் தங்களது உதவிக்கரங்களை நீட்டி வருகின்றன. குறிப்பாக இந்தியா முதல் நாடாக நேற்று துருக்கிக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா நியூசிலாந்து உள்பட ஏராளமான நாடுகள் நிவாரண பொருட்களை அனுப்பி தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... Turkey Earthquake:துருக்கி, சிரியா நிலநடுக்க பலி 4 ஆயிரத்தைக் கடந்தது: 20ஆயிரமாக அதிகரிக்க வாய்ப்பு-WHO

34

துருக்கியை போல் சிரியாவும், இந்த நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. ஏற்கனவே உள்நாட்டு போரால் உருகுலைந்து போன சிரியா அதிலிருந்து படிப்படியாக மீண்டு வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கமும், அதனால் ஏற்பட்ட சேதங்களும் அந்நாட்டு மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

44

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, நிலநடுக்கத்தால் சின்னாபின்னமான துருக்கி குறித்து கண்ணீர் மல்க கவிதை ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கவிதை இதோ...

“துருக்கியின் கீழே
பூமி புரண்டு படுத்துவிட்டது

ரிக்டர் கருவிகள்
வெடித்துவிட்டன

வான்தொட்ட கட்டடங்கள்
தரைதட்டிவிட்டன

மனித உடல்கள் மீது
வீடுகள் குடியேறிவிட்டன

மாண்டவன் மானுடன்;
உயிர் பிழைத்தவன்
உறவினன்

உலக நாடுகள்
ஓடி வரட்டும்

கண்ணீர்
சிவப்பாய் வடியும் நேரம்”

இதையும் படியுங்கள்... துருக்கி விமான நிலையத்தை இரண்டாகப் பிளந்த நிலநடுக்கம்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved