- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஷாக்கிங் நியூஸ்! கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய முன்னணி சீரியல் நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!
ஷாக்கிங் நியூஸ்! கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய முன்னணி சீரியல் நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!
Swetha Sends Divorce Notice to Her Husband : நடிகை ஸ்வேதா தனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக அவரது கணவர் பரபரப்பு கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Swetha Sends Divorce Notice to Her Husband
சினிமா உலகில் நட்சத்திரங்களின் வாழ்க்கை எப்போதும் ரசிகர்களின் கவனத்தில் இருக்கும். அதில் திருமணம் மற்றும் விவாகரத்து போன்ற விஷயங்கள் அதிகமாக பேசப்படுகின்றன. பல பிரபல ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துகொண்டாலும், சிலர் காலப்போக்கில் பிரிவைத் தேர்வு செய்து வருகிறார்கள்.
இத்தகைய பிரிவுகளுக்கு முக்கிய காரணங்களாக வேலைப் பிஸி, தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள், வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை கூறப்படுகின்றன. சில நேரங்களில் புகழ், அழுத்தம் மற்றும் மீடியா கவனமும் உறவுகளை பாதிக்கக்கூடும்.
சரோகேசி மூலம் குழந்தை? - விமர்சனங்களுக்கு அதிரடி பதில் சொன்ன இந்திரஜா சங்கர்
Serial Actress Swetha
கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல யூடியூப் சேனலுக்கு ஸ்வேதா காதலர் என கூறி ஆதி என்பவர் பேட்டி கொடுத்தார். ஆனால் அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஸ்வேதா தனது இன்ஸ்டாகிரான் பக்கத்தில் பதிவிட்டார். இதனிடையே தற்போது ஆதி, நடிகை ஸ்வேதா தனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக பரபரப்பு கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியீட்டு இருக்கும் பதிவில், ”வணக்கம்.. என் பெயர் ஆதி நடிகை ஸ்வேதாவின் கணவர் சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் நான் அளித்த பேட்டியில், நான் தான் அவர்களின் கணவர் என்பதையும் தெரிவித்திருந்தேன்.
Swetha as Tamizhselvi
அதற்கு பின்னர், ஸ்வேதா அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "என்னை அவருக்கு தெரியாது; அவர் கூறுவது பொய்; என்று பல குற்றச்சாட்டுகளுடன் பதிவு வெளியிட்டிருந்தார்கள். ஒருவர் தெரியவில்லை என்றால், எப்படி விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப முடியும்? ஆனால் எனக்கு அவர்களிடமிருந்து விவாகரத்து நோட்டீஸ் வந்துள்ளது. அந்த நோட்டீஸிலும் என்னைப் பற்றி பல குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
Chinna Marumagal Serial Actress Swetha
இத்தனை நாட்களாக நான் அமைதியாக இருந்தது - அவர்கள் என் மனைவி என்பதாலும், ஒரு பெண்ணை பொது இடத்தில் அவமதிக்கக் கூடாது என்ற மரியாதையாலும் தான். மேலும் ஒருநாள் அவர்கள் உண்மையை புரிந்து கொண்டு திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடனும் காத்திருந்தேன் “ என்றார். இவரின் பதிவு சமூக வலைதளங்களில் பேச்சு பொருளாக மாறி இருக்கிறது.