பாலிவுட் திரையுலகையே கையில் வைத்திருக்கும் 6 கம்பெனிகள்! என்னென்ன... யாருக்கு சொந்தமானவை தெரியுமா?
மிகவும் திறமையான நடிகரும், நடன கலைஞருமான சுஷாந்த் சிங், மன அழுத்தம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒட்டு மொத்த பாலிவுட் திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவர் உயிருடன் இருக்கும் போது, ஆதரிக்காத பாலிவுட் திரையுலகம், இவர் இல்லை என்றதும் இரங்கல் தெரிவித்து வருவதற்கு பலர் மறைமுகமாகவும் நேரடியாகும் விமர்சித்து வருகிறார்கள்.
அந்த வங்கியில் பிரபல நடிகர் கமல் ஆர் கான், அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் பாலிவுட் திரையுலகம் ஒட்டு மொத்தமாக 6 கம்பெனிகள் கையில் தான் உள்ளது என்றும், அவர்களுக்கு பிடிக்காதவர்கள் பாலிவுட் திரையுலகத்தில் இருக்க முடியாது என கூறியுள்ளார்.
இது குறித்து சுஷாந்த் தன்னிடம் அழுதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் அந்த 6 கம்பெனிகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் பற்றியும் தைரியமாக பேசியுள்ளார் கே கமல் கான். அந்த கம்பெனிகள் பற்றிய விவரம் இதோ...
சல்மான் கான் பேமிலி புரொடக்ஷன்
இயக்குனர் கரண் ஜோகரின் (தர்மா புரொடக்ஷன்)
ஆதித்யா சோப்ராவின் ( YRF புரொடக்ஷன்)
பூஷன் குமாரின் ( T - Series கம்பெனி)
ஏக்தா கபூரின் (பாலாஜி டெலி பிலிம்ஸ்)
நாடிடுவாலாவின் (சஜித் புரொடக்ஷன் நிறுவனம்)