டிக் டாக்கில் அரைகுறை ஆடையில் ஆட்டம் போடும் சூர்யா தற்கொலை முயற்சி..! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!
டிக் டாக்கில் ஆபாச ஆட்டம் போடும் சூர்யா தற்கொலை முயற்சி..! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!
திரையுலகில் தங்களுடைய திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்காத பலர், டிக்டாக் போன்ற செயலிகள் மூலம் தங்களுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், பிரபலமானவர் தான் ரவுடி பேபி என தன்னை தானே அழைத்து கொள்ளும் சூர்யா.
ஆரம்பத்தில் அம்சமாக புடவை கட்டி வீடியோ போட துவங்கிய இவர் தற்போது அரைகுறை ஆடையில் வந்து நிற்கிறார்.
திருப்பூர் பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி தான் இவருடைய உண்மையான பெயர். டிக்டாக்கில் ரெளடிபேபி சூர்யா என்ற பெயரில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். இவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் டிக்டாக்கில் உள்ளனர், லைக்குகளை அள்ளுவதற்கு தன்னுடைய ஆடையையும் குறைக்க துணிந்தார் சுப்பு லட்சுமி
இந்த நிலையில் சமீபத்தில் சிங்கப்பூரிலிருந்து திரும்பிய சூர்யாவுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.
ஆனால் ஏசி அறையிலேயே தான் இருந்து பழக்கப்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்யும் அறையில் ஏசி வேண்டும் என்றும் தனிமைப்படுத்தப்பட்டால் தனக்கு தனி அறை வேண்டும் என்று அடம்பிடித்தார். இதனையடுத்து அவரை சமாதானம் செய்து சுகாதாரத்துறையினர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்
இந்த நிலையில் திடீரென இன்று காலை ரெளடிபேபி சூர்யா தனது தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய முயன்றதாகவும் அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்றி, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரித்த போது, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியளித்த, சூர்யா நிருபருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார்.
இதனால் அந்த நிருபர், இவர் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சூர்யா தற்கொலை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.