டிக்-டாக் பிரபலம் ஜி.பி.முத்து தற்கொலை முயற்சி... அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...!
டிக்டாக் தடையால் மிகவும் மனம் உடைந்த அவர், பிரதமர் மோடிக்கெல்லாம் கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டார். டிக்டாக் தடை காரணமாக இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அவர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள டிக்-டாக் செயலி மூலம் பிரபலமானவர்கள் ஏராளம். அதில் ஜி.பி.முத்து என்பவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடியைச் சேர்ந்த ஜி.பி.முத்து, மற்றொரு டிக்-டாக் பிரபலமான சூர்யாவுடன் பாடல்களுக்கு போட்ட டூயட் மூலமாக பிரபலமானவர்.
gp muthu
ஜி.பி.முத்துவின் டிக்டாக் வீடியோக்களை கலாய்ப்பதற்கு என்று சோசியல் மீடியாவில் பல குரூப் உலவிக்கொண்டிருந்தது. இதனால் கடுப்பான ஜி.பி.முத்துவும் அவர்களை திட்டி வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
டிக்டாக் தடையால் மிகவும் மனம் உடைந்த அவர், பிரதமர் மோடிக்கெல்லாம் கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டார். டிக்டாக் தடை காரணமாக இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அவர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் ஜி.பி. முத்து திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார். கடும் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்த ஜி.பி.முத்து வலியை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.