குறைந்த வாக்குகளுடன் பிக்பாஸ் வீட்டுக்கு இந்த வாரம் குட்- பை சொல்லப்போவது இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம், சம்யுக்தா வெளியேறிய நிலையில், இந்த வாரம் யார் வெளியேற உள்ளார் என்பது குறித்த யூகங்கள் எழ தொடங்கி விட்டது.
இந்த வாரம் ஆரி,அனிதா, ஷிவானி, ஆஜித், ரம்யா, நிஷா மற்றும் சனம் ஆகிய ஏழு பேர் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இவர்களில் நேற்று வரை ஷிவானி தான் குறைவான வாக்குகள் பெற்றிருந்ததாகவும் அவரை அடுத்து அஜித் மற்றும் நிஷா ஆகியோர் குறைவான வாக்குகளைப் பெற்று இருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி சனம் தான் குறைவான வாக்குகள் பெற்று இருப்பதாகவும் அவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சனம் எப்போதும் போல், இந்த வாரம் நன்றாக விளையாடிய போதிலும்... கால்செண்டர் டாஸ்க்கில் 1 முதல் 13 வரையிலான ரேட்டிங் பிரச்சினையின் போது மட்டும் அவர் பிடிவாதமாக இருந்து இரண்டாவது இடத்தை அனிதாவிடம் இருந்து பிடுங்கி கொண்டது தான் அவருக்கு வாக்குகள் குறைய காரணம் என கூறப்படுகிறது.
இருப்பினும், பிக்பாஸ் விளையாட்டில் தோழிக்கு கூட விட்டு கொடுக்காமல் பிடிவாதமாக இருந்தது தவறு இல்லை என்பது போன்றும் சிலர் தங்களுடைய கருத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
யூகிப்பின் அடிப்படையில் மட்டுமே வெளியாகியுள்ள இந்த தகவல், உண்மையாகுமா..? கண்டெண்ட் கொடுக்காத போட்டியாளர்கள் ஒரு சிலர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அவ்வப்போது கண்டெண்ட் கொடுத்துக்கொண்டிருக்கும் சனம் ஷெட்டி இந்த வாரம் வெளியேறுவாரா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.