முடிவுக்கு வரும் சூப்பர் ஹிட் சீரியல்..! சோகத்தில் ரசிகர்கள்..!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த, சூப்பர் ஹிட் சீரியல் முடிவுக்கு வர உள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், சில சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில், ரசிகர்களின் ஆதரவோடு ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று 'திருமணம்'.
விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணை எப்படி, ஹீரோ காதலிக்க துவங்குகிறார் என, எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பானது இந்த சீரியல்.
இந்த சீரியல் கிட்ட தட்ட 2 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் இரண்டாம் வருட கொண்டாட்டத்தை கொண்டாடி மகிழ்ந்தது இந்த சீரியல் தரப்பு.
இந்த சீரியலில் ஹீரோ ஹீரோயினாக நடித்த சித்து - ஸ்ரேயா இருவரும் வாழ்க்கையிலும் ஒன்று சேர வேண்டும் என பல ரசிகர்கள் ஆசை பட்டனர். ஆனால் இருவருமே தாங்கள் நண்பர்கள் என கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த சீரியல் அக்டோபர் 16 ஆம் தேதியோடு நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சித்து, விஜய் டிவியில் இன்று முதல் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா மானசாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.