ஒருவழியா வீடு திரும்பினார் விஜய் மகன்... மகிழ்ச்சியில் தளபதி ஃபேமிலி...!
கொரோனா காரணமாக நாடு திரும்ப முடியாமல் கனடாவில் சிக்கித் தவித்த விஜய் மகன் விஷயத்தில் வெளியான நல்ல செய்தி ரசிகர்களை ஆனந்தத்தில் மிதக்க வைத்துள்ளது.
தல அஜித் போலவே தளபதி விஜய்யும் அவருடைய மகன், மகளை மீடியா வெளிச்சம் படாமல் பொத்தி, பொத்தி வளர்த்து வருகிறார். அதையும் மீறி சில போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வெளியானால் அதை தளபதி ரசிகர்கள் தாறுமாறு வைரலாக்கி விடுகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்த போது விஜய் ரசிகர்களுக்கு கிடைத்த அதிர்ச்சியான செய்தி அவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் சினிமாத்துறை சார்ந்த படிப்பை படித்து வருகிறார். கொரோனா பிரச்சனை காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் விஜய் மகன் கனடாவிலேயே தங்க வேண்டிய சூழலால் ஏற்பட்டது.
அங்கு கொரோனாவின் தாக்கம் பெரிய அளவில் இல்லை என்றாலும், நெருக்கடி நேரத்தில் மகனை பிரிந்திருப்பதால் விஜய் வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் வெளிநாட்டில் இருக்கும் விஜய் மகன் சஞ்சய் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக அவரது தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்தது. அதன் பின்னரே தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மேலும் சிறப்பு விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில்,கனடாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய ஜேசன் சஞ்சய், அங்கிருந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு சென்று தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
அந்த ஓட்டலிலேயே 14 நாட்களாக தனிமைப்படுத்திக் கொண்ட சஞ்சய் தற்போது வீடு திரும்பியுள்ளார். கொரோனா போன்ற இக்கட்டான காலத்தில் பல மாதங்களாக ஜேசன் சஞ்சையை பிரிந்திருந்த குடும்பத்தினர், தற்போது அவர் வீடு வந்து சேர்ந்ததால் மகிழ்ச்சியில் உள்ளனர்.