மீசையும் தாடியுமாய் சூர்யா..மீண்டும் இணைந்தது குறித்து பாலாவுக்கு நன்றி சொன்ன நாயகன்!
.பாலாவின் மறு பிரவேசமாக இந்த படம் அமைய வேண்டும் என பலரும் வாழ்த்து கூறுக வரும் நிலைகள் உங்களுடன் மீண்டும் இணைந்ததில் பெரு மகிழ்ச்சி பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா என சூர்யாவும் பதிவிட்டுள்ளார்.

SURIYA 41
மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் பாலா, சேது படத்தின் மூலம் புகழ்பெற்றார். தனது முதல் படத்திலேயே பல விருதுகளை குவித்தார். தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது, தமிழ் ஃபிலிம் பார் விருது, தமிழ் திரைப்படத்திற்கான தமிழ் தேசிய திரைப்பட விருது என பல விருதுகளை பெற்றுள்ளார் இயக்குனர் பாலா.
SURIYA 41
சேது படம் மூலம் இவர் இயக்கும் படங்களில் கண்டிப்பாக ஒரு ஸ்டஃப் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதன்படியே அடுத்தடுத்த படங்களையும் ஹிட் படங்களாக கொடுத்தார் பாலா. ஆனால் இவருடன் நடிக்கும் நாயகர்களின் பாடு கொஞ்சம் சிரமம் தான். மற்ற இயக்குனர்கள் போல நாயகனை நாயகனாக சித்தரிக்காமல். படாத பாடு படுத்தி விடுவாராம் இயக்குனர்.
மேலும் செய்திகளுக்கு...nayanthara marriage photos : பின்வாங்கிய பிரபல நிறுவனம்..கடுப்பாகி திருமண புகைப்படங்களை வெளியிடும் நயன்தாரா!
SURIYA 41
அதன்படி இவர் இயக்கத்தில் வெளியான நந்தா, பிதாமகன், மாயாவி, நான் கடவுள், அவன் இவன் பரதேசி பிசாசு என அடுத்தடுத்த படங்களில் அகோரமாக காட்சியளித்தார்கள் ஹீரோக்கள். ஆனால் இந்த தொகுப்பில் உள்ள படங்கள் அனைத்துமே பிளாக் பாஸ்டர் அடித்த படங்களாகும். அதோடு நேஷனல் அவார்டு வரை சென்ற படங்களும் கூட.
மேலும் செய்திகளுக்கு...அடேங்கப்பா....மற்ற மொழிகளிலும் மாஸ் காட்டும் கமலின் விக்ரம்..
SURIYA 41
இதில் நந்தா படம் சூர்யாவிற்கு ஒரு திருப்புமுனையாகவே அமைந்தது மற்ற நடிகர் போல வாரிசு நடிகரான இவரும் காதல் மன்னனாகவே இருந்தார். நந்தா தான் இவரை ஆக்சன் ஹீரோவாக மாற்றியது. அந்த படத்தை அடுத்து பிதாமகன். நடிகர்களின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த காரணமாக இருந்த பாலாவிற்கு சமீப காலமாக சருக்களையும் மிஞ்சியது.
SURIYA 41
தனது முதல் நாயகனாக விக்ரமின் மகனையும் தன் இயக்கத்தில் அறிமுகப்படுத்த எண்ணிய பாலா தெலுங்கு அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமைக்காக துரு விக்ரமை வைத்து வர்மா படத்தை இயக்க படத்தின் உருவாக்கம் பிடிக்கவில்லை எனக் கூறிய தயாரிப்பாளர் இந்த படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டார். முன்னதாக இயக்கிய சண்டிவீரன்,தாரை தப்பட்டை, நட்சத்திரம் போன்ற படங்கள் மிதமான வெற்றியை கண்டன. தற்போது பாலா ஆர் கே சுரேஷ் வைத்த விசித்திரன் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...பாதியில் நிறுத்தப்பட்ட ராக்கெட்ரி..கொதித்தெழுந்த ரசிகர்கள்... வேண்டுகோள் விடுத்த மாதவன்!
SURIYA 41
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பாலாவிற்கு கைகொடுக்கும் விதமாக சூர்யா தான் ஒரு படம் நடித்து கொடுப்பதாக உறுதி அளித்தார். அதனுடன் தனது பேனரான 2டி மூலமே இந்த படத்தை தயாரிக்கவும் சம்மதித்தார். சூர்யா 41 என தற்காலிகமாக பேயரிடப்பட்ட இந்த படம் கன்னியாகுமரி ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.
கடற்கரை ஒட்டி உள்ள பகுதிகளில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவனின் கதையாக இந்த படம் உருவாகிறது. இதற்கிடையே படப்பிடிப்பில் அதிரடி காட்டி வரும் பாலா சூர்யாவை தாறுமாறாக திட்டியதாகவும் அதனால் கோபித்துக் கொண்ட நாயகன் படப்பிடிப்பிலிருந்து வெளியானதாகவும் தகவல் தீயாக பரவியது.
SURIYA 41
ஆனால் அவற்றையெல்லாம் பொய்யாக்கும் விதமாக இருவரும் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்திருந்தார் சூர்யா. இந்நிலையில் சூர்யா 41 படத்தின் புதிய தகவலாக இதன் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது. வணங்கான் என பெயரிடப்பட்டுள்ள இந்த இந்த டைட்டில் லுக் மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது.
அதோடு சூர்யாவின் தோற்றமும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் கிழிந்த சாக்கிற்கு இடையே கண்களில் கோபத்துடன் சூர்யா காத்திருக்கிறார். கரடு முரடான தோற்றத்துடன் இருக்கும் சூர்யாவின் போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது.
SURIYA 41
இந்த போஸ்டர் மூலம் படம் கண்டிப்பாக ஆக்ஷன் திருவிழாவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.பாலாவின் மறு பிரவேசமாக இந்த படம் அமைய வேண்டும் என பலரும் வாழ்த்து கூறுக வரும் நிலைகள் உங்களுடன் மீண்டும் இணைந்ததில் பெரு மகிழ்ச்சி பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா என சூர்யாவும் பதிவிட்டுள்ளார். இந்த படத்தில் தெலுங்கு நாயகி கிருத்தி செட்டி நாயகியாகவும் ஜீவி பிரகாஷ் இசையமைத்தும் வருகிறார்.